Tuesday 14 May 2013

நம்பிக்கை = குருடு - ராமகிருஷ்ணபரமஹம்சன்

முதல் தகவல்  அறிக்கை:
கட்டுரையில்; ல ழ ற ன ஆகிய எழுத்துக் கொண்ட பெயர்ச்சொற்கள் ஆழ்ந்த பொருள்கொண்டவை. பிழையெனக்கருதித் திருத்தி மாற்றிவிட வேண்டாம். பிராமணர் இவற்றைச் சூத்திர எழுத்துக்கள் என அறிவித்துள்ளனர்.


இந்தியா மற்றும் இலங்கை குறித்த உண்மையான வரலாற்றின் சுருக்கத்தை இக்கடுரையின் தொடக்கத்தில்; பிறமொழிகளிலும் உள்ள வேத இதிகாச புராண சாஸ்த்ரங்கள் மற்றும் தொன்மையான தமிழ்ப்பாடல்கள் காப்பியங்கள் ஆகியவற்றின் சான்றுகளை ஆங்காங்கு அடைப்புகளுக்குள் ஒற்றை எழுத்துக்களில் குறிப்பிட்டும்; பின்னர் சான்றுகளை விளக்கங்களுடன் விரிவுபடுத்தியும் எழுதப்பட்டுள்ளது. சான்றுகளில் எவையொன்றும் முழுமையான வரலாற்றை வெளிப்படுத்தவில்லை; அனைத்திலும் வரலாறு சிதறிக்கிடக்கிறது என்பதை உணர்ந்து; எந்தவிதமான முன்முடிவும் இல்லாமல் பயிலும்படியும் கோரப்படுகிறது. முடிவற்ற வரலாற்றுக் கட்டுரையை ஏற்பதும் விலக்குவதும் காலத்தால் இறுதிசெய்யப்பட வேண்டும்.
இதிகாசங்களில் இராமாயணம் மட்டும்தான் பல்வேறு வடிவங்களிலும் மொழிகளிலும் இந்தியா மட்டுமன்றிப் பிற நாடுகளிலும் கடந்த 1600 ஆண்டுகளாக இராமனின் உறவுகள்=சொந்தங்கள் குறித்து மாறுபட்ட தகவல்களுடனும் எழுதப்பட்டுள்ளன. நமது வரலாறு இந்தியாவின் வடமேற்கில் தொடங்கித் தெற்கே சென்று மீண்டும் வடக்கை வென்று தெற்கை அடைகிறது; மாபாரதமாகத் தொடங்கி இராமாயணமாக விரிந்து மீண்டும் மாபாரத்துக்குள் புகுந்து நீங்கி பக்திக்களத்தை அடைகிறது.
மாபாரதம்-1.56-33 வரலாற்றாசிரியர்களுக்கு ஒரு சவால் விடுகிறது: "இங்கிருப்பதெல்லாம் வேறு எங்கும் இருக்கலாம்; இங்கில்லாதவற்றை வேறு எங்கும் காணமுடியாது" என. இச்சவால்; மாபாரதத்துக்கு மட்டுமல்லாமல் வேத இராமாயண புராண பழந்தமிழ்ப் பாடல்களுக்கும் அப்படியே பொருந்துவதையும்; கடந்த நூறு ஆண்டுகளாக இவற்றில் அழகியலை மட்டுமே காணும் வரலாற்றாசிரியர்களும் வரலாற்றை வெளிப்படுத்த முன்வரமாட்டார்கள் என்பதை அறிந்தே; அன்றைய புலவர்கள்; பரிபாடல்: 1 / 32-34ல் "இலங்குபூண் மாஅல்! தெருள நின்வரவு அறிதல் மருளறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே" என ஒரு சவால் விட்டுள்ளனர். இவை அனைத்திலும் வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் படிமவடிவிலும் புராணவடிவிலும் உள்ளன. இப்படிமங்களை உடைக்கவும் புராண மொழியை உணரவும் அறியாதோருக்கு; வரலாறு என்பது 'கண்ணில் ஊமன் கடல் பட்டாங்கு' இருண்டதாக வேடிக்கைகாட்டும் என்பதே இச்சவால்களின் முரண்நகை.
உலகில் வரலாறும் மொழியும் பிரிக்க முடியாததாயினும் வரலாறற்ற இனமும் மொழியும் நீடித்து வாழ முடியுமா? மிகப்பழமை யான பாடல்களைத் தமிழில் பெற்றிருந்தும் இந்தியத் தமிழருக்கு; வரலாறு எழுதப்படாததை உணரமறுப்பது வெட்கக் கேடானது. அன்றைய இலங்கை; கடல்நீரால் பிளவுபடாமல் சேர்ந்திருந்து இராமாயண நிகழ்வுக்காலத்தில் பிரளயத்தால் இந்தியாவிலிருந்து பிரிந்ததாகச் சான்றுகள் அனைத்தும் தெரிவிக்கின்றன.
இந்தியவரலாறு சூரியகுலச் சந்திரகுப்தனின் தந்தை போரசுடன் போரிட்ட கிரேக்கன்= மரீசி=முதல் அலெக்சாந்தனில் துவங்கி சந்திரகுப்தனுடன் போரிட்ட கிரேக்கன் மகாஅலெக்சாந்தன்=பூர்ணகாசியப்பனில் விரிவடைகிறது. வேத, பாரத குறிப்புகளில் இரண்டு சத்தியவதிகள் உள்ளனர்; ஒருத்தி கன்யகுப்த மன்னன் காதியின் மகள் சத்தியவதி. இவளுக்குப் பிறந்தவனே ஜமதக்கினி; இவளது தாய்க்குப் பிறந்தவனே விசுவாமித்திரன். அலெக்சாந்தன்=பூர்ணகாசியப்பனே; புஷ்யமித்திரனால் மகதத்திலிருந்து விரட்டப்பட்டுத் தெற்கே வந்துசேர்ந்த ஜமதக்கினி. ஜமதக்கினியின் மகனே காசியப்பன் என்னும் முசு குந்தன் என்னும் பரசுராமன். இதனை மறைக்க; மறுஜென்மம் பூர்வஜென்மம் என மேலும் பல குழப்பங்களைச் செய்துள்ளனர். வரலாற்றில் இல்லாத அசோக=தேவவிரத=பீஷ்மனைச் சந்திரகுப்தனுக்குப் பிறந்தவன் எனக்காட்டி; சந்திரகுப்தனின் மகன் கரவேலன்=கண்ணனை மறைக்க முயன்றனர். மற்றொரு சத்தியவதி=ஹெலன்; அலெக்சாந்த பூர்ணகாசியப்பனின் அடிமைப் படைத்தளபதி சிவன்படவன்* =செம் படவமீனவனான இலங்கைத்தீவில் வாழ்ந்த செல்யூக்கஸ் நிகந்தனின் மனைவிக்கும் அலெக்சாந்தனுக்கும் பிறந்தவள். இவளைச் சந்திரகுப்தனுக்கு மணம்முடித்து; அவளுக்குப் பிறக்கும் வாரிசுகளுக்கு மட்டுமே ஆட்சி யுரிமையைக் கொடுக்கக் கட்டாயப்படுத்தி; அடிமைகளைக்கொண்டு தங்களது மேளான்மையை நிறுவ முயன்றனர். மேலும் சந்திரகுப்தனை மணக்கும் முன்னரே பராசரனுடன் புணர்ந்து சத்தியவதி=ஹெலனுக்குப் பிறந்தவனே வியாசன் என்ற போதிலும் பராசரன் யார் என்பதில் குழப்பம் உள்ளது. ஆயினும் மரீசி=ரிச்சிகன்= முதல் அலெக்சாந்தனின் பேரனே பராசரன் என்பதை மாபாரதம் உணர்த்துகிறது. பாட்டன் பேரன் என இரு பராசரர்களும்; பாட்டி பேத்தி என இரு சத்தியவதிகளும் இருக்கக்கூடுமோ? இவர்களது உறவில் ஒரு விபரீதப் புணர்ச்சியை உணர்வதைத் தவிர்க்க முடியவில்லை. ஒவ்வொருவரின் பெயர்களையும் வரிசைப் படுத்திக் கொள்வோம்.
பாட்டன்=முதல் அலெக்சாந்தன்=மரீசி=ரிச்சிகன்=பராசரன்=வசிட்டன்=பார்கவா=மனு;
மகன்=மகா அலெக்சாந்தன்= பூர்ணகாசியப்பன்=வசிட்டன்=ஜமதக்கினி=பார்கவா=மனு;
பேரன்=காசியப்பன்=பராசரன்=தேவவிரதன்=பீஷ்மன்=முசுகுந்தன்=பரசுராமன்=பார்கவா=மனு.
பிராமணரின் தலைமைப் பதவி வகிக்கும் வசிட்டருள்; ரிஷி, ராஜரிஷி, பிரம்ம ரிஷி எனப் படிநிலைகள் உண்டு. தமிழ் மற்றும் தமிழரின் தலைமைப்பதவி வகிக்கும் அகத்தியருள் நாற்பத்தொன்பதாவது அகத்தியனே கரவேலன்=கண்ணன். அமணத்தில் தலைமைப் பதவி வகிப்போர்; முன்னர் பெரும்பதவியில் இருந்தபோது தங்களை அறியாமல் அல்லது தங்கள் நாட்டில் நடக்கும் தகாச்செயலுக்குத் தண்டிக்கப்பட்டு 12 ஆண்டு அல்லது ஏழுநாட்களுக்கு அமணப்பள்ளியொன்றில் தொண்டு பரிகாரம் செய்வதாகவும்; 12ஆண்டு வடவராலும், ஏழுநாள் நம்மவராலும் விதிக்கப்பட்ட தண்டனையெனவும் சிலர் உணரலாம்.
காசிநகரில் பூர்ணகாசியப்பனால் நால்வருணக்கோட்பாடு புகுத்தப்பட்டதால் வரணாசி எனப் பெயரிடப்பட்டது. சந்திர குப்தனால் வெற்றிகொள்ளப்பட்ட நாடுகளனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து சந்திரகுப்தனையும் பிணித்த பூர்ணகாசியப்பன்; வசிட்டனாகப் பெயர்பெற்று; மன்னர்க்கான விதிகளை மனுதர்மம் என உருவாக்கி மனித தர்மத்தை அனைவரும் கடைப்பிடிக்க; நாடுகளை மூன்று பகுதிகளாக்கிக் கட்டுப்படுத்தியபோது மக்களிடையே அமைதியற்ற நிலை உருவானது. வசிட்டனும் மகன் காசியப்பனைத் தலைவனாக்க முயன்று; சந்திரகுப்தனின் மகன் கரவேலன்மீது பொய்க் குற்றம் சுமத்தி நாடுகடத்தினான். திரு, மயிலை சீனி வேங்கடசாமி: "சந்திரகுப்த்த மௌரியன் அரசாட்சியைத் துறந்து சமண சமயத்தைச் சார்ந்து, பத்ரபாகு முனிவருடனும் துறவிகளுடனும் தென்னாட்டுக்கு வந்து களபப்புநாட்டில் உள்ள களபப்பு மலையில் தங்கினார்கள் என்று சமணசமய "வட்டாராதெனே"(பத்ரா பஹுபட்டாரகதே) என்னும் நூல் கூறுகிறது......; இப்போதைய சிரமண பெலுகொல என்னும் பிரதேசமே பழங்காலத்தில் களபப்புநாடு என்று பெயர் பெற்றிருந்தது." எனக் குறிப்பிடுகிறார். சந்திரகுப்தனும் சூழ்நிலைக் கைதியாகிச் சிரமண பெளு கொளவுக்கு(வெள்ளைக்குளம்) கடத்தப்பட்ட நிலையில் சத்தியவதிக்குப் பிறந்த பிந்துசாரன் மற்றும் பிம்பிசாரன் ஆகிய இருவருள் மூத்தவன் கொலைசெய்யப்பட்டதால்; பீஷ்மன் என்னும் காசியப்பன் தன்னைப் பாதுகாப்பாளனாக அறிவித்துக்கொண்டு பிம்பிசாரனை இளவரசனாக்கித் தனது தந்தை பூர்ணகாசியப்பனின் மூன்று பெண்களான அம்பா அம்பிகா அம்பாலிகா ஆகியோரை மணம் செய்வித்து, அடிமைகளைப் பெருக்க முயன்றனர். மூவருள் மூத்தவள்; சால்வன் என்பானுடன் தொடர்பு கொண்டு காதலித்து வருவதால் விடுவிக்கும்படி வேண்டினாாள்; ஆயினும் சால்வன் அவளை ஏற்கமறுத்தான். இந்தச் சால்வனுடன் போரிட்டுச் சந்திர குப்தனின் மகன் கரவேலன் கொன்றான். திரும்பிவந்த அம்பா; தனது வாழ்க்கை நாசமாக்கப்பட்டதால் சிகண்டியாக ஆண் வீரர்களுக்குக்கான போர்க்கலையைக் கற்றுக் காசியப்பனைக் கொலை செய்வதாகச் சபதம்செய்து நீங்கினாள். தந்தை மகன் எனக் காசியப்பர் இருவரும் கரவேலனின் நாடுகளையும் கைப்பற்ற முயன்றனர். (வரலாற்றில் இல்லாத அசோகனாகப் புகுத்தினர்) பிம்பிசாரனும் கொலை செய்யப்பட்டதால் வாரிசில்லாத சத்தியவதி வாட்டமுற்றாள். திருமணத்துக்கு முன்னரே இலங்கையில் தன்னைப் புணர்ந்த பராசரனால் பிறந்த வியாசனை; மகனாக இருந்து இருபெண்களுடன் புணர்ந்து வாரிசை உருவாக்க விரும்பியபோது சகிக்கமுடியாத இருவரும் தங்களது பணிப்பெண்ணை வியாசனுடன் புணரவிட்டதால் விதுரன் பிறந்தான். அமிகாவும் அம்பாலிகாவும் அம்பா போலவே சிகண்டியராகிக் காசியப்பனைக் கொல்வதாகச் சபதமிட்டு நீங்கினர்.
மகதத்தில் வேத இதிகாச புராணங்களில் யாகப்பலிகளை விருப்புடன் செய்யும் புஸ்ய மித்திரன் ஜராசந்தனாகவும் தெரிகிறான். பூர்ணகாசியப்பன்=வசிட்டன்=ஜமதக்கினி எனப்பெயர்பெற்ற அலெக்சாந்தனையும்; அவனது மகன்=காசியப்பன்= முசுகுந்தன்=இந்திரன்=பரசுராமன்=மஹாவீர்=மாதேவன்=தேவவிரதன்=பீஷ்மன் எனப்பெயர் பெற்ற துர்யோதனனையும் கூட்டாளிகளையும் விரட்டித் தன்னை வேந்தனாக அறிவித்துக் கொண்டான். சந்திரகுப்தனின் மகன் கரவேலன்; புஸ்ய மித்திரனை அடக்கி மகதத்தைக் கைப்பற்றியதாகவும் தனது தாயாதியருடன் மகதத்தை அடைவதில் போட்டி இருந்ததாகவும் கரவேலனின் அகத்திக்கும்பாக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன; கரவேலின் கலிங்க புவனேஸ்வரில் உதயகிரிமலை அகத்திக்கும்பாக் குகையில், இரு பகுதிகளைக்கொண்ட சிதைந்தநிலைக் கல்வெட்டு; 'கலிங்கத்தின் கரவேலன், தென்கே பாண்டியனை வெற்றி கொண்டான்' எனத்தெரிவித்து; 'தமிழ் அரசர்கள் தங்களுக்கு உகந்தவர்கள்' எனவும்; அமணரை ஆதரித்ததையும்; 'குமரியில் அமணமுனிவர்க்கு' உதவியதையும், கிரேக்கத்தின் ஹெலனுக்குப் பிறந்த வரிசுகளுக்கும் கார்வேலுக்கும் பகை இருந்ததையும் குறிப்பிடுகிறது. 'இக்கல்வெட்டு (மராட்டிய) மேற்குப்பகுதியைச் சார்ந்த அமணனால் வெட்டப்பட்டது' எனக்குறிப்பிடுவதிலும்; புத்தன் மற்றும் பௌத்தம் குறித்த தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரகுப்தனின் தங்கை பிரிதாவை மணந்த சூரியகுலத்தின் உருவப்பல்தேர் சேத்சென்னியே தாய்வழிச் சமுதாய மரபுப்படி மகதத்தின் அரசனாக வேண்டும். ஆயினும் தந்தைவழிச் சமுதாயத்தை மரபாகக்கொண்ட அலெக்சாந்த பூர்ண காசியப்ப வசிட்டன்; தனது மகன் காசியப்பனைத் தலைவனாக்கும் எண்ணத்தில் சேத்சென்னிக்கும் பிரிதாவுக்கும் குழந்தை பிறந்தால் அதனை அழிக்கச் சதிசெய்து; பிறக்கும் முன்னரே 12 ஆண்டுகள் தண்டித்திருந்தான். இதனை அறிந்த கரவேலனும் விசுவா மித்திரனும் வேங்கடமலைக் காட்டுப்பகுதியில் பிரிதாவை வைத்துக் குழந்தை கரிகால்சோழன் பிறக்கும்வரை பாதுகாத்தனர். குழந்தை பிறந்ததை மறைத்துச் சேத்சென்னியும் தனக்கு ஒரு ஆண் குழந்தைவேண்டி வேள்வி செய்வதுபோல நடித்த போதிலும் பெண்குழந்தை= பாவைதான் பிறந்தாள். இந்நிலையில் வியாசன்=ஜனகன் தன்னால் உருவாக்கப்பட்ட நாட்டில் தனது தாய் சத்தியவதியையும் சந்திரகுப்தனின் தங்கை பிரிதாவையும் சேத்சென்னியையும் குடியமர்த்த விரும்பியபோது வசிட்டனும் காசியப்பனும் எதிர்ப்புத் தெரிவித்தனர். காரணம் சத்தியவதியின் வாரிசுகளால் உருவாக்கப்படும் நாடுகளின்மீதும் தங்களுக்கு உரிமை உண்டு என நிலைநாட்டும் எண்ணமே. எனவே இந்நாடு சீதையாகக் கருதப்பட்டுச் சுயம்வரம் நடத்தப் பட்டது. 12 வயது நிறம்பிய கரிகால்=இராமனை விசுவாமித்திரன் அழைத்துச்சென்று போட்டிகளில் அசுரமுறையில் வென்று கொண்டான். இந்நிலையில் பூர்ணகாசியப்ப வசிட்டன் ஜமதக்கினியாகவும்; காசியப்பன் முசுகுந்தனாகவும் பெயர்பெற்று; சேத்சென்னியைத் தலைவனாக்கி ஏழு திசைக் காப்பாளர்களர்களை அமர்த்தி மகா அபிசேஷக விழா நடத்தினர். ஏழு திசைக் காப்பாளருள் தென்முனையின் காவலனாக அமர்த்தப்பட்டவனே மயன் என்னும் விசுவகர்மன். அப்போது இலங்கை என்னும் நாடு கடல்நீர் சூழ்ந்ததாக இல்லை; தென்னகத்துடன் சேர்ந்தே இருந்தது.
ஜராசந்த புஷ்யமித்திரனால் விரட்டப்பட்ட கரவேலன் மேற்கே துவாரகா என்னும் இன்றைய பாஞ்சாபுக்குச் சென்று சத்தியவதி= ஹெலனுடன் பிறரை வேங்கடக்காட்டுப் பகுதியில் தனக்கு விசுவாமித்திரனால் உருவாக்கிக் கொடுக்கப்பட்ட திருப்பதியில் குடியமர்த்தினான். அடிமைகளாக இருந்த செல்யுக்கஸ்நிகந்த கூட்டத்தரையும் புஷ்யமித்திரன் விரட்டிவிட்டதால் அவனும் பிரகத்தன்=சம்பரன் எனப் பெயர்கொண்டு தண்டகாரன்யம் என்னும் வேங்கடக்காட்டுக்குள் மறைந்து வாழ்ந்து அவ்வப்போது வேங்கடத்திலும் பிறபகுதிகளுலும் வழிப்பறி, களவு, கொலைத்தாக்குதல்களை நடத்தினான். முகரிப்பகுதியில்? தனது தந்தை வசிட்டனுடன் வாழ்ந்த காசியப்ப முசுகுந்தனையும் தாக்கியாதத் தெரிகிறது. தாங்கமுடியாத முசுகுந்தன்; தசரதன்= சேத்சென்னியின் உதவியை நாடினான். சேத்சென்னியும் படைவீரர்களை முசுகுந்தனுக்குத் துணையாக அனுப்பினான். செல்யுக்கஸ்நிகந்த பிரகத்தனையும் அவனது ஆரியப்படையினரையும் சிறைப்படுத்திய முசுகுந்தன் தசர சேத்சென்னியிடம் ஒப்படைத்தான். கிரேக்க அடிமைப்படையினராயினும் அவர்களுக்குத் தமிழறிவிக்கும் முயற்சியைமேற்கொண்ட கரிகாலுடன் நட்புக்கொண்ட முசுகுந்தனும் தமிழ் பயில்வதில் ஆர்வம் கொண்டவனாகத் தெரிகிறான். புலவர் கபிலரின் தலைமையில் அனைவருக்கும் தமிழ் பயிற்றுவிக்கப்பட்டது.
கரிகாலின் தங்கையும் சேத்சென்னியின் மகளுமான பாவையும் இப்பயிற்சியில் கலந்துகொண்டாள். இந்த வாய்ப்பைப் பயன் படுத்தித் தந்தை வசிட்டனுடன் சதிசெய்து நாட்டைக் கைப்பற்றும் முயற்சியாகப் பாவையுடன் முசுகுந்தன் பழகியுள்ளான். பாவையும் முசுகுந்தனின் நடிப்பில் ஏமாந்து கற்பை இழந்தாள். இதனை அறியாத கரிகாலும் தங்களது படையினரால் வெல்லப் பட்ட நாட்டைத் தொண்டை நாடாக்கி நீர்வளம் பெருக்கி ஆரியப்படையினருடன் பிரகத்தனைக் குடியமர்த்தினான். அடிமைகளான ஆரியரைக் குடியமர்த்துவதை விரும்பாத ஜமதக்கினி; முசுகுந்தனைத் தலைவனாக்கித் தொண்டைநாட்டைக் கைப்பற்றினர். பிரகத்தனையும் தனக்குத் துணையாக்கிக் கொண்டு மகதத்தையும் வென்று; யாக வேள்விகள் செய்து இந்திரனாகவும் அறிவித்துக் கொண்டான். இதனை விரும்பாத சேத்சென்னியும் தனது நாட்டுடன் வேங்கடத்தைச் சேர்த்துக் கரிகாலுக்கு இந்திரப்பதவியைப் பெறக் கரவேலனின் துணையுடன் முயன்றனர். இந்திரனாக அறிவிக்க யாகவேள்விகளைச் செய்ய ஜமதக்கினி விரும்பவில்லை. விசுவாமித்திரனைக்கொண்டு யாக வேள்வி செய்தபோது பாவை நிறைசூலியானாள். வேள்வியில் பலியிடவிருந்த கால்நடை(குதிரை)யை முசுகுந்த இந்திரன் கடத்திச்சென்றான். வேள்வி தடைப்பட்டது. விசுவா மித்திரனைப் புரோகிதனாக்கியதே மன்னனின் தகாநடத்தை எனப் பலிசுமத்திப் பரிகாரம் செய்ய மனிதப்பலியிட வேண்டும் என ஜமதக்கினி கட்டளையிட்டான். முசுகுந்தனால் கடத்தப்பட் பசு ஜமதக்கினியின் குடிலருகில் இருந்ததைக் கண்ணுற்ற சேத்சென்னி ஜமதக்கினியிடம் முறையிட்டான். இதனால் தனது மகன் இந்திர முசுகுந்த பரசுராமனைப் பலிகொடுக்க விரும்பாத ஜமதக்கினி; சுனஷேபனைப் பலிகொடுப்பதாக ஒப்புக் கொண்டான்.
விஷ்ணுபுராணம் கன்யகுப்த மன்னன் காதியின் மகள் சத்தியவதியை மணந்த (மனுதர்மசாஸ்த்திரத்தை இயற்றியவர் என நாரதர் குறிப்பிடும்) பிருகு=ரிஷிகன் என்னும் வயதான பிராமணன்; தனது மனைவிக்குப் பிராமணக் குணநலன் கொண்ட மகனும் தனது மனைவியின் தாய்க்கு ஒருவீரனின் குணநலன் கொண்ட மகனும் பிறக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஆனால் அப்பெண்கள் ரிஷிகனின் ஆசையைத் தலைகீழாக மாற்றிவிட்டதால் சத்தியவதிக்குப் பிறப்பவன் கொலைகாரனாக இருப்பான் எனவும் அவளது தாய்க்குப் பிறப்பவன் சாந்தம் ததும்பும் பிராமண குணநலன் கொண்டவனாக இருப்பான் எனவும் அவளது கணவனே சொல்வதாகவும்; அதனைக் கேட்ட சத்தியவதி தனது அறியாமையைக் குறிப்பிட்டுத் தனக்குக் கொலைகாரக் குணநலம் கொண்ட குழந்தை வேண்டாம் எனவும் அத்தகைய குணநலம் கொண்ட பேரன் வேண்டுமானால் பிறக்கட்டும் என வேண்டுவதாகவும்; சத்தியவதிக்குச் சமதக்கினியும் அவளது தாய்க்கு விசுவாமித்திரனும் பிறந்தனர் எனவும்; ரேணுவின் மகளான ரேணுகாவைச் ஜமதக்கினி மணந்துகொண்டான்; ஜமதக்கினிக்குப் பரசுராமன் என்னும் மகன் பிறந்தான் எனவும் குறிப்பிடுகிறது. இந்தப் பரசுராமனின் குடும்ப வரலாறு மாபாரத வனபருவத்தில் உள்ளது.
கரவேலனைக் கண்ணனாகவும் காசியப்பனை உத்தமனாகக் காட்ட; எட்டாவதாகப் பிறந்து கங்கைநதி நீரைத் தடுத்து அணைபோட்ட; தேவவிரதன்=பீஷ்மன் எனப்பெயரிட்டுத் துர்யோதனானகவும் மாபாரதம் குறிப்பிட்ட போதிலும் பரசுராம துர்யோதனனே காசியப்பன் என்பதைப் பிற நூல்களும் இராமாயணமும் காட்டிவிடுகின்றன. கண்ணன்=கிருஷ்ணன் பிறந்த விருஷ்ணி (கருப்பு)குலம் பிராமணர்க்கு எதிரானது. அமணத்தைக் கைப்பற்றிய பரசுராம முசுகுந்தன் கூட்டத்தரால் கண்ணனின் தங்கையின் பேரன் பரீக்ஷித்து கொலை செய்யப்பட்டதாலேயே பார்கவ பிராமணர்கள் கண்ணனால் பலிவாங்கப் பட்டனர். மாபாரதத்தில் தருமதேவதையின் அவதாரமான விதுரன் சந்திரகுத்தவனாகவும் காட்டப்படுகிறான்; அமணத்தைப் பாம்பு எனக் குறிப்பிடுவது எல்லா மரபிலும் ஏற்கப்பட்டுள்ளது. பாம்பு கடித்ததாலேயே பரீக்ஷித்து இறந்தான் எனப் படிம வடிவிலேயே இத்தகவல் இடம்பெற்றுள்ளது. புத்தமதத்தின் தாக்கத்தால் கிருஷ்ணன் விஷ்ணுவாக்கப் பட்டான். மா பாரதத்தில் கிருஷ்ணனிடம் கேட்பதாக ஒரு கேள்வி; 'அவன் உலகப்பொதுக் கடவுளாயின் தன்னை ஏன் பிராமணன் என்று அறிவித்துக் கொள்ளவில்லை?' என உள்ளது. மாபாரதத்தில்; பிருஹுக்களாக =பார்கவ பிராமணராக வைதிகராக அதிக அளவில் இடம்பெற்றோரே ரிஷிகன்=மறீசியின் மகன் அலெக்சாந்தன்=பூர்ணகாசியப்பன்= ஜமதக்கினியின் மகன் காசியப்பன் =முசுகுந்தன்=பரசுராமன் கூட்டத்தர். வேதங்களில் பார்கவ இனம் என்பதாக எதுவும் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
விரிவான வரலாறு
சூரியகுடியின் சேத்சென்னிக்குத் தென்பகுதியை மகா அபிஷேக வேள்வி நடத்தி ஏழு திசைக்காப்பாளருடன் வசிட்டன் ஒப்படைத்தான். திசைக்காப்பாளருள் கரிகாலுக்கு வசிட்டனும் விசுவகர்மனுக்குக் காசியப்பனும் முடிசூட்டினர் எனவும் கரிகால்சோழனே சுதாசன் எனப் பெயர்பெற்றதையும் வேதங்களில் காண்கிறோம்.
ரிக்வேத ஐத்ரேயபிராமணம்: உருவப்பல்தேர் இளஞ்சேத்சென்னியை இடைநாடான சோழநாட்டின் தலைவனாக்கி; ஏழு திசைக்காவளரை அமர்த்தி நடத்திய மகாபிஷேசக விழாவைக் குறிப்பிடுகிறது; இதனை நடத்திய புரோகிதனான வசிட்டன்= ஜமதக்கினி; சென்னியைக் கட்டுப்படுத்தப் பண்ணிய முதல்வேள்வியைக் குறிப்பதாகும்.
இதில் ஏழுதிசைக் காப்பாளர்களாக இடம்பெறுவோர்: சரியாதி, சமசுஷமன், அம்பஷ்தியன், யுதமஸ்ரௌஷ்ட், மயன் எனும் விஷ்வகர்மன், (கரிகால்)= சுதாசன், மருத்தன் என உள்ளனர்; இவர்களுள் சுதாசன்=கரிகாலுக்கு முடிசூட்டியவன் வசிட்டன்; விசுவகர்மன்=மயனுக்கு முடிசூட்டியவன் வசிட்டனின் மகன்(காசியப்பன்=முசுகுந்தன்). தனக்குக் கொடுக்கப்பட்ட தென் திசை(இலங்கை)க் காவலை நெடுஞ்செழிய நகுஷனிடம் இழந்துவிட்டதாக ஒருபாடல் குறிப்பிடுகிறது(மார்டின் ஹாக், தொகுதி II, பக்523-524): "(பூமித்தாய்-இலங்கை)எந்தமனிதனும் என்னைத் தானமாகக்கொடுக்க அனுமதிக்கப் படவில்லை; ஓ விஷ்வகர்மனே நீ என்னைத் தானமாகக் கொடுத்துவிட்டபடியால் நான் கடலில் குதிப்பேன் (புயலால் தென்னகத்தை விட்டுப்பிரிந்து தனியாகக் கடல்நடுவே சென்றுவிட்டது) காசியபருக்கு(முசுகுந்தனுக்கு) நீ கொடுத்த வாக்குறுதி வீனாயிற்று" என்பதாக. இராவணன்= நெடுஞ்செழியன் மயனின் பெண்ணைக் கெடுத்து நாட்டையும் தன்வசப்படுத்திக் கொண்டதால் மயன் தனது நாட்டை இழந்து துரத்தப்பட்டான்; அண்ணன் குபேரனையும் விரட்டிவிட்டான் என்பதை இராமாயணத்தில் காண்கிறோம். எட்டாவது தலைமைத் திசைக்காப்பாளனாக (வசுதேவன்)இடம்பெறுபவனே தலைவனான இளஞ்சேத்சென்னி.
விசுவகர்ம மயனுக்கும் காசியப்ப முசுகுந்தனுக்கும் இடையே என்னவாக்குறுதி-ஒப்பந்தம் இருந்தது, மயன் ஏன் அதனை வீனடித்தான்? எங்குமே காணமுடியவில்லை; வசிட்டனுக்கும்; பராசர=முசுகுந்த= பரசுராம =துர்யோதனனுக்கும்; இராவண= நெடுஞ்செழியன் போன்றோருக்கும்; இலங்கையின் பாதுகாவலனான விசுவகர்ம மயன் எதிராகச் செயல்பட்டுள்ளான். மாபாரதத்தில் ஐவரும் திருப்பதி-த்ரோபதி-பாஞ்சாலத்தை வென்று தங்களுக்கான அரண்மனை அமைத்தபோது; அமைத்துக் கொடுத்தவன் மயனே; காரணம் காண்டவவனத் தீவிபத்திலிருந்து மயனைக் காப்பாற்றியவர்கள் பாண்டவர்கள். பரசுராம= துர்யோதனன் எளிதில் தீப்பற்றக்கூடிய அரக்கு வீட்டைக்கட்டி அதில் ஐவரைத் தங்கவைத்துத் தீயிட்டு அழிக்க முயன்ற போது; அவ்வீட்டை அமைத்த மயன்; அங்கிருந்து தப்பிச்செல்லச் சுரங்கவழியை அமைத்துக்கொடுத்துக் காத்தவன். பிற திசைக் காவலர்கள் முசுகுந்த பரசுராமனுக்கு ஒத்துழைத்து, சுதாச கரிகாலுக்கு எதிராகச் சதிசெய்தனர். அதனாலேயே பராசரனையும் வசிட்டனையும் சுதாசன் ஒதுக்கினான் என ரிக்வேதம் குறிப்பிடுகிறது. கலித்தொகை-பாலைக்கலிப் பாடல் 25:
"வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்;
ஐவர்என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தரா;
கைபுனை அரக்குஇல்லைக் கதல்எரி சூழ்ந்தாங்கு
கலிதிகழ் கடாஅத்த கடும்களிறு அகத்தவா
முளிகழை உயர்மலை முற்றிய முழங்குஅழல்
ஒள்ளுரு அரக்குஇல்லை வளிமகன் உடைத்துத்தன்
உள்ளத்துக் கிளைகளொடு உயப்போகு வான்போல .. ." எனச் சந்திரகுப்தன் காலம்முதலாக ஒரு மாபாரத நிகழ்வில் குறிப்பிடுகிறது. 26ம்பாடலில்; மராஅமும் செருந்தியும் காஞ்சியும் ஞாழலும் இலவமும் என "தீதுதீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோல" எனத் தமிழர் ஐவரைப் படிமவடிவில் குறிப்பிடுகிறது.
உருவப்பல்தேர் சேத்சென்னியின் மகள் பாவையைப் பிராமண வேடமிட்டுக் காதலிப்பதுபோல் நடித்துக் கெடுத்து திருமணத்தில் பாணிக்கிரணம் செய்ய முயன்றபோது முசுகுந்தன் ஓடிவிட்டதை ஸ்ரீமகா கந்தபுராணத்தில் தக்ஷன்=சேத்சென்னி குறிப்பிடு கிறான். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலிரையும் பயன்படுத்திச் சோழநாட்டையும் கைப்பற்ற இந்திரனாக முசுகுந்தன் அறிவித்துக் கொண்டான். இந்நிலையில் சோழநாட்டின் புரோகிதனான அலெக்சாந்த பூர்ணகாசியப்ப வசிட்டன்; ஜமதக்கினி எனப் பெயர்பெற்று சேத்சென்னியும் தனதுமகன் கரிகாலை வேந்தனாக்க வேள்விகள் செய்ய விழைந்தபோது; தொண்டை நாட்டுக்குச் செல்லவேண்டியிருப்பதால் பிறகுபார்க்கலாம் எனச்சொல்லிச் சென்றுவிட்டான். பாவையைக் கெடுத்த முசு குந்தனோ; விபச்சாரி என இழிவுபடுத்தி ஏற்கமறுத்தான். இந்நிலையில் சேத்சென்னியால் நடத்தப்பட்ட வேள்வியில் பூசலிட்ட முசுகுந்தன்; வேள்விப்பலிப் பசுவைக் கடத்தியதோடு நாட்டைத் தன்னிடம் ஒப்படைக்கவும் கட்டாயப் படுத்தினான். இதனைக்கண்டு வருந்திய விசுவாமித்திரன் மற்றும் கரவேலனின் பாதுகாப்பில் இருந்த பாவை; முசுகுந்தனின் கழுத்தை நெறித்துத் தொண்டை நாட்டுக்குள் வரக்கூடாது என எச்சரித்தபோது யாககுண்டத்தில் வீழ்த்தியதாகத் தெரிகிறது. அவளது ஒருபக்கத்து உடல் கருகிவிட்ட நிலையில் நிறைசூலியான பாவையை எடுத்துக்கொண்டு கரிகால்சோழனும் படையினரும் வேள்விக்களத்தை நீங்கி மறைந்துசென்றனர். இந்நிலையில் முசுகுந்தன்; பரசுராமன் எனப் பெயர்பெறுகிறான். பாவைக்குச் செங்குட்டுவன் பிறக்கிறான். செங்குட்டுவனை மகனாக ஏற்க மறுத்த முசுகுந்தன்; பாவையை விசுவாமித்திர குல விபச்சாரி எனக் குற்றம்சுமத்தி; பழையமன்றாடி எனப் பெரியபுராணத்திலும் பெயர்பெற்றான்.
தங்கை பாவையைக் காக்கச்சென்ற கரிகால் இல்லாதவேளையில்; தனது துணைவி ரேணுகாவாலேயே தங்களது சதித்திட்டங்கள் அனைத்தும் கரிகால்சோழனுக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஐயம் கொண்ட ஜமதக்கினி; ரேணுகாவின் தலையை வெட்டப் பரசுராமனைப் பணித்தான்; காரணம் ரேணுகாவும் கரிகால்சோழனின் மனைவி இலக்குமி=ஸ்ரீயும் அக்கா தங்கையர்; சினம் தனியாத ஜமதக்கினி; கரிகால்சோழனின் மனைவியின் தலையையும் வெட்டிவிட்டு உடலைக் கொண்டுவரும்படி பரசுவுக்குக் கட்டளையிட்டான். கரிகாலின் மனைவியின் தலைவெட்டி வீசிவிட்டு உடலை எடுத்துச்சென்றபோது தடுக்கவந்த ஏழு சிறுமியரையும் தனது பரசு என்னும் கருவியால் வெட்டிக் கொன்றான். இதனை அறிந்த மக்கள்கூட்டம் ஜமதக்கினியின் ஆசிரமத்துக்கு வந்தபோது பரசுராமன் சேரல மலைநாட்டுக்கு ஓடிவிட்டான். மக்கள் ஜமதக்கினியைக் கொலைசெய்தனர். கரிகால்சோழனின் மனைவி ஸ்ரீயின் தலையை முதலில் கண்டெடுத்த கரிகாலின் சூரியகுடியினர்; அங்கலம்மா= அங்கமில்லாத அம்மா எனக் குலதெய்வமாகக் கொண்டனர். ரேணுகாவை அந்தர=ஆந்தரதேசத்தோர் குலதெய்வமாகவும் கொண்டாடுகின்றனர். ஏழு கன்னிப்பெண்களைக் கன்னிமாராக இந்தியா எங்கும் கொண்டாடுகின்றனர். பாவையைத் தீப்பாய்ந்த அம்மன், பச்சையம்மா, காமாட்சி, மீனாட்சி எனப் பலபெயர்களில் வழிபடுகின்றனர். கொலையானோரின் அடையாளத்தை மறைக்க ஜமதக்கினியால் அங்கலம்மாவின் உடலுடன் மாற்றிச் சேர்க்கப்பட்ட ரேணுகாவின் தலை சேர்ந்த உருவுக்குமுன் அங்கலம்மாவின் தலை வைக்கப்பட்டு; மாறியம்மா எனப் பட்டிதொட்டியெல்லாம் கொண்டாடுகின்றனர்.
ஜமதக்கினியின் கட்டளைப்படி சோழநாட்டில் நடந்த தகாச்செயல்கற்குக் கரிகால்சோழனைப் பொறுப்பாக்கிப் 12ஆண்டு தண்டனை விதித்து நாடுகடத்துவதாக அறிவித்தனர். எதிர்த்த அனைவரும் முசுகுந்தனால் அடக்கப்பட்டனர். புலியூர்=சிதம் பரத்தில் தமிழ் அந்தணரால் பாதுகாக்கப்பட்ட சோழரின் திருமுடியைப் பெற்று முடிசூட்டிக்கொள்ள முசுகுந்தக் கூத்தன் முயன்றபோது; அந்தணர் முடிசூட்ட மறுத்தனர். சினமுற்ற முசுகுந்தக் கூத்தன்; தில்லைவாழ் அந்தணரை விரட்டிவிட்டுப் பிராமணரைக் குடியமர்த்தினான். தில்லையில் இருந்த தீர்த்தங்கர=பள்ளிகொண்ட கண்ணனையும் அமணதீர்த்தங்கரி= தில்லைக்காளி=பாவையையும் நீக்கினான். தில்லையை நீங்கிய அந்தணர்; 12ஆண்டு தண்டிக்கப்பட அகத்தியன் கரிகால் வாழ்ந்த பொதியைப் பகுதிக்குச் சென்றதால் சேரலத்தில் குடியமர்த்தப் பட்டனர். சோழநாட்டை ஆள்வதற்கான பொன் ஆரம்; அரசவம்சனோ சூரியகுடியினனோ அல்லாத விதுரனின் மகன் நெடுஞ்செழியன்=நகுஷனிடம் வழங்கப்பட்டது. நெடுஞ் செழியனும் சிலகாலம்வரை நல்லவனாகவே இருந்தான். பின்னர் பரசுராமனால் சோழருக்கெதிராக மாறினான்.
சேரலமலைகளுக்குத் தப்பியோடிய பரசுராமன்; தனது அதிகாரத்தைக்கொண்டு பிராமணரின் உதவியுடன் சேரலநாட்டின் பல பகுதிகளைக் கட்டுப்படுத்திப் பிராமணரிடம் ஒப்படைத்தவை பரசுராமக்ஷேத்ரம் எனப்பட்டன. மீண்டும் சோழநாட்டுக்கு வந்த பரசுராமன் தனது தந்தை ஜமதக்கினி கொலை செய்யப்பட்டதை அறிந்து; கரிகாலின் தந்தை சேத்சென்னியைக் கொன்றான். மாபாரதத்தில் தீர்த்தயாத்ரா பருவத்தில் பரசுராமனும் ஒளியிழந்து பிருகுதீர்த்தத்தில் நீராடி ஒளிபெற்றதாக உள்ளது; பாண்டவரும் தீர்த்த யாத்திரை சென்றதாக உள்ளது; தண்டனை பெற்றவர்கள் அமணத்தில் தொண்டு செய்ய வேண்டிய கட்டாயவிதி இருந்ததாகத் தெரிகிறது. சேரநாட்டில் சேரலாதர்களைக் கட்டுப்படுத்திப் பெருஞ்சேரலாதனைப் பாதுகாப்பாளனாக அறிவித்தான். பெறுஞ்சேரலாதன் வாலி எனவும் அவனதுதம்பி நெடுஞ்சேரலாதன் சுக்ரீவன் எனவும் பரசுராமனே மாறீசனாகவும் இந்திரனாகவும் இராமாயணத்தில் பெயர்பெற்றனர். பரசுராமனின் கட்டுப்பாட்டை ஏற்காத அடிமையாக இருக்கவும் விரும்பாத நெடுஞ்செழியன்; பரசுராமனையும் அடக்கினான். கட்டுப்படுத்த விரும்பிய பரசுராமன்; பிராமணப்பெண்ணை நகுஷ நெடுஞ்செழியனின் மகன் யயாதிக்கு மணம் செய்வித்துச் சூத்திர நெடுஞ்செழியனைச் சற் சூத்திரனாக அல்லது சத்ரிய=ஒளியனாக அறிவித்துச் சந்திர குலத்தனாக்கினான். 12ஆண்டு முடிந்த நிலையில் சோழ நாட்டை ஆளும் தகுதிக்கான பொன் ஆரத்தைத் திரும்ப ஒப்படைத்த நெடுஞ்செழியன்; பரசுராமனுக்கு அடிமையாக இருக்க விரும்பாமல் மாறீச பரசுராமனின் துணையுடன் மீண்டும் பொன்ஆரத்தைக் களவாடினான். மயனின் பெண்ணையும் கெடுத்ததால் தாய்வழி மரபுப்படி விசுவகர்ம மயனிடமிருந்து இலங்கையையும் கைப்பற்றி மறைந்து கொண்டான்.
அதேகாலத்தில் இந்தியாவுடன் ஒட்டியிருந்த இலங்கை; புயலாலும் இயற்கைச் சீற்றத்தாலும் கடல்நடுவே சென்று தீவாகி விட்டது. இலங்கையில் நெடுஞ்செழியன்; இராவண சுரனாக மறைந்து கொண்டான். இராமன் எனக் கரிகாலும் அனுமன் மற்றும் இலக்குவன் எனச் செங்குட்டுவனும் இராமாயணத்தில் பெயர்பெற்றுப் பரசுராம மாறீசனை விரட்டியடித்ததால் மீண்டும் வடக்கே சென்று துர்யோதனனாக மாபாரதத்தில் பெயர் பெறுகிறான். செங்குட்டுவன் அனுமனாக இலங்கை சென்று பொன் ஆரம் வைக்கப்பட்ட இடத்தையும் இராவணனையும் கண்டு வெற்றியுடன் திரும்பியபோது நீந்திச்செல்லத் தக்கதாக இருந்த இலங்கைத்தீவு; மீண்டும் கடல் கொந்தளிப்பால் இடைவெளி அதிகமாகிவிட்டது. இலங்கையிலிருந்து முத்திரை மோதிரத்துடன் திரும்பிவந்த செங்குட்டுவனின் தலைமைக் கீழ் வேலிர் படையினர் ஒப்படைக்கப்பட்டனர். செங்குட்டுவனின் தந்தை முசுகுந்தனால் கைப்பற்றப்பட்ட வேலிர்படையையும் திரும்பெற முசுகுந்தனுடன் போரிட்ட தகவலை; கண்ணகிக்குச் சிலைவடிக்கக் கல்லெடுக்கச் சென்றதாகச் சிலப்பதிகாரம் மாற்றிக் குறிப்பிடுகிறது. மாபாரதமோ சிவ இந்திர்னே பாசுபதார்த்தத்தைக் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறது. நெடுஞ்சேரலாதனின் உதவியுடன் சேரலநாட்டினரும் அன்றைய இலங்கைக்குப் பாறைகளைக்கொண்டு பாலம் அமைத்தனர். இதனை சேது எனக் குறிப்பிடுகிறாம்; சுப்ரமண்ய பாரதியும்: "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுருத்தி வீதிசமைப்போம்" என்றான். இராவணன் அழிக்கப்பட்டான். கைப்பற்றப்பட்ட பொன் ஆரத்தை அணிந்து ஆட்சிசெய்ய முயன்றபோது பொது மக்களுள் ஒருவன்; '12ஆண்டுக்குப் பிறகும் ஆரம் இராவண நெடுஞ்செழியனிடம் இருந்ததால் கறைப்பட்டுள்ளது' என முறையிட்டான். ஆரம் மீண்டும் அக்னிப்பிரவேசம் செய்து புதுப்பிக்கப்பட்டது. வடக்கே ஓடிய பரசுராமன் கிரேக்கரின் துணையுடன் மீண்டும் சோழநாட்டையும் கண்ணனின் துவாரகா என்னும் துவரையையும் வேங்கடத் திருப்பதியையும் தாக்கினான். ஒருநிலையில் தருமன்=கரிகாலுக்குரிய நாடுகளையும் ஐந்து திணை அரசர்களுக்கும் பொதுவான திருப்பதியையும் சூதரின் உதவியுடன் சூதாட்டத்தில் தருமனிடம் வென்றுள்ளான். கரிகாலே தருமனாகவும் செங்குட்டுவனே அர்ச்சுனனாகவும் பெயர் பெற்று; மாபாரதத் துர்யோதன பரசுராமனையும் அழித்தனர். இராமாயணத்தில் சோழநாடும் அதனை ஆள்வதற்கான பொன் ஆரமுமே சீதை எனப்பட்டது. மா பாரதத்தில் இந்திய மண்ணே த்ரௌபதி=திரிப்பதி=திருப்பதி=இந்திரப்பிரஸ்தமாகப் பெயர்பெற்றது. சோழ மண்ணே கரிகால்=திருமாலின் மனைவி பூதேவியாகவும் வைதேகியாகவும் பெயர்பெற்றது. இந்நிலையில் ஹெலனுக்குச் சந்திரகுப்தன் கொடுத்த வாக்குறுதியை மதித்து, குறுநடைப் புறா=ஹெலனின் வேண்டுதலை ஏற்று வடவேங்கடம் தென் குமரி நீங்கலாக அனைத்து நாடுகளையும் ஹெலனிடம் கொடுத்தனர். வடவேங்கடம் வரையிலான நாடுகள் அனைத்தும் செங்குட்டுவனிடம் ஒப்படைக்கப்பட்டன. அனைத்து நாடுகளையும் மீட்ட கரிகாலே அமணத்தில் இறுதித் தீர்த்தங்கரனாகிப் புத்த அமண கோதமன் ஆனபோது புத்தமதம் என்பதாக எதுவும் இல்லை. அமணம்தான் மேன்மைப்படுத்தப்பட்டது.# மேற்கண்ட வரலாற்றுக்கான சான்றுகள் பல்லாயிரக் கணக்கில் பல இந்தியமொழிகளில் உள்ளன. சிலவற்றைக் காண்போம்.
* கிருஷ்ணகிரி நகரில் மிண்டகிரியில் உள்ள நடுகல்லில் புலி(சோழருடன்) பொருது இறந்துபட்டானைச் "சிவன்படவன்" என்று குறிப்பிட்டுள்ளனர். சிவன்படவனது கூட்டத்தரே செம்படவர், பார்கவர் என மாபாரதத்திலும் பெயர்பெற்றனர்.
# முசுகுந்தனை ஒதுக்கித் தீர்த்தங்கரியான பாவையைக் காஞ்சி காமகோட்டத்திலிருந்து நீக்க ஏழு நதி=படைகளைக்கொண்டு வந்ததாகக் காஞ்சிப்புராணம் குறிப்பிடுகிறது. பின்னர் முறைப்படி பாவையை நீக்க முசுகுந்தனும் தீர்தங்கரப் பதவிக்குப் போட்டியிட்டுப் பிராமண=பிற அமணரின் உதவியுடன் வென்று மகாவீர் எனப் பெயர்பெற்றான். இதனை: "'வேள்வியில் பலியாகும் உயிர், சொர்க்கத்தை அடையும்' என்றால்; பிராமணர் ஏன் தங்களையே பலியிட முன்வருதில்லை? அமணத்தில் சேர்ந்த பின்னர்; கொலை வேள்விகளை ஏற்காவிட்டாலும்; பாவம்-புண்ணியம் சொர்க்கம்-நரகம் என ஏற்கும் மஹாவீர்; சொர்க்கத்தில் இருப்பதாகவே நினைத்துக் கொள்கிறான்" என; புத்தன்-கரிகால் குறிப்பிடுவதாக; மேலும் பல சான்றுகள் உளளன. அமணத்தில்; கொலை வேள்வியை எதிர்த்த கரிகாலின் புத்தநெறி; கலப்பிரர் காலம்வரை நீடித்தது. புத்தன்= கரிகால்=புத்தகோதமனை இறுதித் தீர்த்தங்கரனாக அமணர்கள் வழிபடப்பட்டனர் என்பதைப் புதைபொருள் தொல்லியல் ஆய்வுகள் காட்டுகின்றன."புத்", "சிவ்" என்னும் சொற்கள்; பிறவிப்பெருங்கடலை நீந்திப் பெருவாழ்வு பெறுவதையே குறிக்கின்றன. ஆயினும் சிவ்=சிவன் என்னும் சொல் பழந்தமிழ்ப் பாடல்களிலோ பிற இலக்கியங்களிலோ இடம்பெறவில்லை. "பொருளும் சாரமும் இல்லை; மாற்றம் மட்டுமே உள்ளது" என்பதே கரிகால்=புத்தனின் கண்டுபிடிப்பு.
'புத்தனுக்கு வால்மீகிராமாயணம் முற்பட்டது, பழந்தமிழ்ப் பாடல்கள் பிற்பட்டன'; என்னும் கருத்துக்கு முரணாக இலங்கையில்; புத்த ஆலயம் போன்ற அழகிய மேடையில் அனுமன் சீதையை=பொன் ஆரத்தைக் கண்டதாக வால்மீகியின் சுந்தரகாண்டம் குறிப்பிடுவதும்; பழந்தமிழ்ப் பாடல்களில் புத்தன் இல்லாததோடு; கொலைவேள்விகள் நடந்ததையும்; பிராமணிய வேள்வி யாகங்களை முற்றிலுமாக நீக்கித் தடைசெய்தவனே கரிகால் என்பதையும்; பழந்தமிழ்ப் பாடல்களும் சிலப்பதிகாரமும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. புத்தன் யார்? என்பதையும்; இராமாயண காலத்தை மறைக்கச் பழந்தமிழ்ப் பாடல்கள் திருத்தப் பட்டதையும் தெளிவாக உணரமுடிகிறது. இறுதித் தீர்த்தங்கரனான கரிகால்; புத்தகோதமன் எனப் பெயர் பெற்றதும்; பிற அமணர்=பிராமணர் அமணத்திலிருந்து நீக்கப்பட்டதும்; அதனை ஏற்காத கரிகால் அவர்களை ஏற்று அமண கோதமனாகச் செயல்பட்டதும் அமணநூல்களிலேயே தெரிகின்றன. பிற்காலத்தில் அமணநூல்களும் அமணமும் பிளவு படுத்தப்பட்டுச் சிங்களரால் சிதைக்கப்பட்டன; புத்தமதத்தைத் தோற்றுவித்து; புத்தன் குறித்த புனைவுகளையும் கல்வெட்டுக்களையும் பலரின் பெயர்களில் எழுதவும் பொறிக்கவும் செய்தனர். ஆயினும் சிங்களருக்குப் புத்தம் ஒரு கேடயமாகவே இன்றுவரை பயன்படுகிறது; சிங்களர் எவரும் உண்மையான புத்த நெறிகளை எக்காலத்திலும் ஏற்று நடந்ததில்லை. பிற பகுதிகளிலும் கீழை நாடுகளிலும் உண்மை வரலாற்றை அறியாத பௌத்தர்களாகப் பலரும் இருப்பது வேதனையளிப்பதாகும். உண்மை வரலாறு; பௌத்தரையும் மக்களையும் சென்றடையுமா? தமிழன் அதனை அனுமதிப்பானா? 

No comments:

Post a Comment