Wednesday 27 November 2013

நச்சினார்க்கினியர் கொடுக்கும் வரலாற்றுத் தகவல்கள்

நம்பிக்கை = குருடு ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சன் நச்சினார்க்கினியர் கொடுக்கும் வரலாற்றுத்தகவல்கள் வரலாற்றைக்காண உதவக்கூடியவையே முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும். இவற்றிலும் வரலாற்றை மறைக்கும் முயற்சியாகவே பாட்டுடைத் தலைவர்கள் இல்லாதபடி மாற்றப்பட்டன. செழியனைத் தவிறப் பிறர் இடம்பெற்ற போதிலும் மேலும் ஒருவன் இடம்பெற்றிருந்தான். அவனே பிரகதத்தன் செல்யுக்க்ஸ்நக்கந்தன். இதனையே குறிஞ்சிப்பாட்டின் அடிக் குறிப்பான "ஆரியவரசன் பிரகதத்தனுக்குத் தமிழரிவித்தற்குப் பாடியது" என்ற தகவல் உணர்த்துகிறது. இத்தகவலைக் கொடுத்தவர் குறிஞ்சிப்பாட்டைப் பாடிய கபிலரா, வேறு எவருமா என்பதிலும் உறுதியற்ற நீலை இன்றுவரை நீடிக்கிறது. எப்படியாயினும் இத்தகவலைக் கொடுத்தவர் பிற்காலத்தவரே; அவரது காலத்தில் முழு வரலாறும் இருந்திருக்கவேண்டும் என்பதையே இத்தகவல் உணர்த்தி நிற்கிறது. எனவே அவருக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். உச்சிமீதுவைத்துக் கொண்டாடப்படும் சிறப்புமிக்க உரைகாரரான நச்சினார்க்கினியர்; தொல்காப்பியத்துக்கான தனது பாயிரம் மற்றும் சிறப்புப்பாயிரம் ஆகியவற்றால் கவர்ச்சி மிக்கவராகத் தோற்றம் கொண்டார். தொல்காப்பியர் மற்றும் அகத்தியர் குறித்துக் குறிப்பிடுவதிலும் வரலாற்றுத் தகவல்கள் உறைந்து கிடக்கின்றன; அதனைச் சுருக்கமாகக் காண்போம். "தேவரெல்லாருங்கூடித் தாம் சேர இருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை யுயர்ந்தது, 'இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர்' என்று அவரை வேண்டிக் கொள்ள அவரும் தென்றிசைக்கண் போதுகின்றவர் 'கங்கையார் உழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு பின்னர் யமதக்கினியாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக்கொண்டு புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபமுத்திரையாரை அவர் கொடுப்ப நீர் ஏற்று இரீயிப் பெயர்ந்து துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் குடி வேளிருள்ளிட்டோரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடுகெடுத்து நாடாக்கி பொதியின் கண் இருந்து இராவணனைக் காந்தருவத்தாற் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித் திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி 'நீசென்று குமரியாரைக் கொண்டுவருக' எனக்கூற அவரும் 'எம்பெருமாட்டியை எங்ஙனம் கொண்டுவருவல்' என்றார்க்கு 'முன்னாகப் பின்னாக நாற்கால் நீளம் அகல நின்று கொண்டு வருக' என அவரும் அங்ஙனம் கொண்டுவருவழி வைகை நீர் கடுகிக் குமரியாரை ஈர்த்துக் கொண்டுபோகத் தொல்காப்பியனார் கட்டலை யிறந்து சென்று ஓர் வெதிர்கோலை முறித்து நீட்ட அது பற்றி யேறினார். 'அதுகுற்றம்' என்று அகத்தியனார் குமரியாரையும் தொல்காப்பியனாரை யும் 'சுவர்க்கம் புகாப்பீர்' எனச் சபித்தார். 'யாங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையால் எம் பெருமானும் சுவர்க்கம் புகாப்பீர்' என அவர் அகத்தினாரைச் சபித்தார். அதனால் வெகுண்ட அகத்தியனார், அதங்கோட்டாசிரியரை நோக்கி 'நீ தொல்காப்பியன் செய்த நூலைக் கேளற்க' என்றார்." மேற்கண்ட குறிஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்பு, நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய நூலுக்கான பாயிர உரை ஆகியவை கொடுக்கும் தகவல்களுக்கான விளக்கங்களையோ வரலாற்றையோ எந்த வரலாற்றாளரும் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. மிகச் சிறந்த தகவல்களைக் கொடுக்கும் இவற்றை ஏன் ஒதுக்குகிறார்கள் எனபது புதிராக உள்ளது. தென்மேற்கு இந்தியப்பகுதிகளான ஆப்கானிஸ்த்தானுக்கு மேற்கே பாரசீகம் ஈரான் கிரேக்கம் ரோம் எகிப்து போன்ற நாட்டைச் சேர்ந்தோரும் அரேபியரும் இந்தியாவுக்குள் வாழ்வும் வணிகமும் தேடிவந்த காலத்துக்குப் பின்னர் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு வடமேற்கிலிருந்து படிப்படியாக முன்னேறி வடகிழக்கு நாடுகளில் பெண்களைச் சிறுமைப்படுத்தித் தங்களை நிறுவிக்கொண்டு வாழ்ந்த காலத்தில் ஒரு மேலைநாட்டவன் பெண்வழிச்சமுதாயத்தை இழிவுபடுத்தியபோதும் பெண்ணைப் பகடைக்காயாக்கித் தெற்கிலும் நாடுகளைக் கைப்பற்ற முயன்றபோதும் இவ்வரலாறு தொடங்குகிறது. குறிஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்பில் இடம்பெற்ற பிரகத்தன் என்பவன் இராமாயணத்திலும் மாபாரதத்திலும் தொல்தமிழ்ப் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளான். ஆரியவரசனான பிரகத்தன் எப்படித் தென்னகத்துக்குள் வந்தான் என்பது குறித்து எவரும் ஆய்வு செய்யவில்லை. தமிழ்ப்பாடல்களை எழுதியவனாகவும் இடம்பெற்றது எப்படி என்பதற்கும் விளக்கம் இல்லை. ஆரியனாக இடம்பெற்ற பிரகத்தனின் கூட்டம் தொல்தமிழ்ப் பாடல்களில் கானகத்தில் வாழ்ந்ததை; குறுந்தொகை- 7: வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர் யார்கொல் அளியர் தாமே ஆரியர் கயிறால் பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயில் அழுவம் முன்னி யோரே" எனக் குறிப்பிடுகிறது. இப்பாடல் கையில் வில்லுடன் காலில் கழலணிந்த திருமண மாகாத ஒரு இளைஞனும் அவனுடன் தொடியோள் என அடையாளப்படுத்தப்படும் தென்பகுதி சார்ந்த, காலில் சிலம்பணிந்த ஒரு சிறுமியும்; ஆரியர் நிறைந்த காட்டுக்குள் அச்சமின்றிச் செல்கிறார்களே; இவ்விருக்கும் என்ன ஆகுமோ என அஞ்சிப் பாடுவதாக இப்பாடல் உள்ளது. ஆரியர் என்ற சொல்லுக்குப் பின்னர் இடம்பெற்ற இரண்டு சொற்களும், இறுதி இரண்டு சீர்களுக்கு முன்னுள்ள சொல்லும் சிதைந்துள்ளன. எப்படியாயினும் வெம்மையான வெங்கடக் காட்டுக்குள் வாகை மரங்கள் நிறைந்த ஆரியர் வாழும் பகுதிக்குள் வடதிசை நோக்கிச் செல்கிறார்கள் என்பது தெளிவாகிறது. தொடியோள் என்ற சிறுமி மேலும் பல தொகைநூற் பாடல்களில் இடம்பெற்றுள்ளாள். எனவே அவளது வரலாற்றை எவரும் விரிவாக ஆய்வுசெய்ய வில்லை. இதில் குறிப்பிடப்படும் ஆரியர்; இராமாயணத்தில் தன்டகாரன்யக் காட்டுக்குள் பதுங்கி வாழ்ந்ததாகக் காணப்படுகிறது. சிலப்பதிகாரத்திலும் இத்தகவல் இடம்பெற்றதோடு ஆரியரைப் போரிட்டுச் சிறைப்படுத்திய தகவலும் விரிவாக இடம்பெற்றுள்ளது. இவர்களைச் சிறைப்படுத்தியவன் தென்னக மன்னன் ஒருவனின் படைத்துணையைப் பெற்றுச் சிறைப்பிடித்ததாக இரண்டு இடங்களில் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். இராமாயணமும் சிலப்பதிகாரமும் ஒரு அந்நியனின் இழி நடத்தைகளை மறைக்கக் கடும் முயற்சி செய்ததைக் காண்கிறோம். ஆரியரைக் குறும்பர் அவுணர் எனப் பல தொல்தமிழ்ப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. ரிக்வேதத்திலும் பலவாறு இடம்பெற்றுள்ளனர். மேலும் இவர்கள் வாழ்ந்த காட்டுப்பகுதிக்குத் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை ஆட்சிசெய்த அரசர்களுடன் பலமுறை போரிட்டும் கொள்ளை யிட்டும் வழிப்பறிசெய்தும் வடவேங்கட எல்லைப்பகுதியில் தொல்லைகொடுத்ததால் துரத்தப்பட்டதாகவும் காண்கிறோம். வடபகுதி அரசர்களுக்குத் துணைநின்று போரிட்டதாகவும் பல பாடல்கள் காட்டுகின்றன. இறுதியாகத் தென்பகுதிப் பெண்ணைக் கெடுத்தவனுக்குத் துணைநின்று போரிட்டபோது தென்பகுத்திப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர் என்பதும் உறுதியாகத் தெரிகிறது. கெடும்மதிகொண்டவனையும், அவனுக்குத் துணைநின்ற ஆரியரையும் இழிவுபடுத்தாமல் நல்வழிப்படுத்தித் தமிழறிவிக்கப்பட்டதைக் குறிஞ்சிப்பாட்டும் முல்லைப்பாட்டும் பிற பாடல்களும் உறுதிப்படுத்துகின்றன. ரிக்வேதம்: 10-49.3- (இந்திரன்):"தஸ்யுக்களிடமிருந்து ஆரியர் என்னும் உயரின மதிப்புப்பெயரை பறித்துவிட்டேன்." அகநாநூறு- 141ல் ஆரியக்குறும்பரைப் பயிற்றுவித்துக் குடியமர்த்தியதைப் புலவர் நக்கீரர்: "நெடுங்கால் மா அத்துக் குறும்பரைப் பயிற்றும் செல்குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் வெள்போர்ச் சொழன் இடையாற்று அன்ன நல் இசை வெறுக்கை தருமார்.......... தேம்கமழ் நெடுவரை பிறங்கிய வேங்கட வைப்பிற் கரன் இறந்தோரே" எனக்குறிப்பிடுகிறார். பெரியபுராணத்தில் சேத்கிழார் புராணவடிவில் " தீது நீங்கிடத் தீக்கலியாம் அவுணர்க்கு..........பொற்பினால் விளங்கும்" எனவும்; "குன்றுபோலு மாமதில்புடைபோக்கி குடியிருத்தின கொள்கையின்" எனவும் சிலதகவல்களை மறைத்துக் குறிப்பிடுகிறார். அனைவரும் ஒன்றுகூடிப் பல்லவராக்கப்பட்டுத் தொண்டைநாட்டைக் கரிகால்சோழன் ஒப்படைத்த போது, பிற தென்னக ஆட்சியாளர் எதிர்ப்புத் தெரிவித்திருப்பர். இதுகுறித்த பாடல்களும் காரணங்களும் மறைந்துவிட்டபோதிலும் சேத்கிழாரின் பெரியபுராணத்தில் மட்டுமே சில தகவல்கள் உள்ளன. பல்லவரின் தொடக்க கால வரலாறும் கிடைக்கவில்லை. ஆரியப் பிரகத்தனையும் சிறைப்பிடித்தபோது; தமிழ் அந்தணர், ஐயர், முனிவர் போன்றோர்; அந்நியரின் தொடர்பை விரும்பாததால்; 'ஆரியர்' எனும் தகுதி நீக்கி, "விராத்திய ஸ்தோமா" சடங்கு செய்து; அந்நியரை முனிவர் சமூகத்தில் சேர்த்துப் பிறரையும் பல்லவராக்கித் தண்தமிழ் பயிற்றுவித்தனர். இதனைத் திரு ஹரஹரப்பிரசாத் சாஸ்த்திரி அவர்களின் "பௌத்த ஆய்வுகள்" என்ற நூல்: "விராத்தியரைத் தூய்மைப் படுத்தவேண்டி நிகழ்த்தப்பட்டதும், 'பஞ்சவிம்ச' பிராமணத்தில் கூறப்பட்டிருப்பதும் ஆன இச்சடங்கு வேதகாலச் சடங்குகளுக்கு மாறுபட்டதாக இருந்தது. பிற சடங்குகளில் வேள்விக் கூடத்தில் ஒரு வேள்வியாளரும் அவரது துணைவியும் இருக்க, இந்தச்சடங்கில் ஆயிரக்கணக்கில் வேள்வியாளர்கள் இருந்துள்ளனர், இச்சடங்கின் முதல்வனாகக் 'குலபதி' இருக்க மற்ற அனைவரும் குலபதியைத் தொடர்ந்து சென்றனர். ஒரே சடங்கில் ஆயிரக்கணக்கில் விராத்தியரை (தமிழ்)முனிவர் சமூகத்தில் சேர்த்துக்கொள்வதற்கான உபாயமென்று நான் கருதுகிறேன். இதுபோன்ற சடங்குகள் அடிக்கடி நிகழ்ந்தன, கூட்டம் கூட்டமாக ஆரியர் நிலைத்துஓரிடத்தில் வாழும் நிலைமைக்குக் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் தங்கள் விராத்திய வாழ்க்கையில் வைத்திருந்த உடைமைகளை உடன் கொண்டுவர அனுமதிக்கப்பட வில்லை, அவற்றை இன்னும் விராத்தியராகவே வாழ்பவருக்கு அல்லது மகததேச பிராமணருக்கு விட்டுவிட்டு வர வேண்டும். வேறொரு இடத்தில் நான் குறிப்பிட்டுள்ளபடி மகததேச பிராமணர் என்போர் [தமிழ்] முனிவர்களால் தாழ்நிலையினராக கருதப்பட்டவர்கள். அதுமட்டுமின்றி அவர்கள் ஒரு சிறந்த முனிவரான உயரிய திறனைப்பெற்ற 'கௌசிதாகி' என்ற புனிதமடைந்த முனிவரையும் பெற்றனர்"; என விரிவாகக்குறிப்பிடுகிறார். எனவே கபிலர் ஆரியர்க்கும் பிற மகதத்தைக் கைப்பற்றிப் பின்னர் புஷ்யமித்திரனால் துரத்தப்பட்டோருக்கும் தண்தமிழ்க்கல்வி பயிற்றினார் என்பது உறுதிப்படுகிறது. மேலும் கபிலர் கௌதாகி முனிவர் எனக் குறிக்கப்படுவதால் விசுவாமித்திரகுல அந்தணராகிறார். சோழகுடிப்பெண்ணைக் கெடுத்தவனுக்கும் துணைநின்ற ஆரியவரசனுக்கும் பிறருக்கும் தண்தமிழறிவித்த கபிலர்: "அன்னாய் வாழிவேண்டு அன்னை ஒள்நுதல் ஒலிமென் கூந்தல் எந்தோழி மேனி விறலிழை நெகிழ்ந்த வீவருங் கடுநோய் அகலுள் ஆங்கண் அறியுனர் வினாயும் பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும் வேறுபல் உருவின் கடவுள் பேணி நறையு விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி நல்கவின் தொலையவும் நருந்தோள் நெகிழவும் புள்பிறர் அறியவும் புலம்புவந் தலைப்பவும் உள்கரந்து உறையும் உய்யா அரும்படர் செப்பல் வன்மையின் செறிந்துயான் கடவலின் .. .மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்; மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி நாமறி வுறாலின் பழியும் உண்டோ? ஆற்றின் வாராது ஆயினும் ஆற்ற ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கென ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும் .. ." என இப்பாடல் 261 அடிகளுக்கு நீண்டு செல்கிறது. அடுத்து முல்லைப்பட்டு; எல்லாநாடுகளும் கைப்பற்றப்பட்டுப் புஷ்யமித்திரனும் கொண்டுவரப்பட்டதாகத் தெரியும் நிலையில் சிறைப்படுத்தப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுக் கல்விபயிற்றியபோது பற்பல மொழிபேசும் அவர்கள் தண்தமிழைப் பயிலாமல் வடமொழி பயின்றனர் என்பதைக் காட்டுகிறது: "நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போல பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு கோடுகொண் டெழுந்த கொடுஞ்செலவு எழிலி பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை அருங்கடி மூதூர் மருங்கில் போகி. .." எனவும் "தேம்படு கவுள சிறுகண் யானை ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த வயல்விளை இன்குளகு உண்ணாது நுதல்துடைத்து அயில்நுனை மருப்பின்தம் கையிடைக் கொண்டென கவைமுற் கருவியின் வடமொழி பயிற்றி கல்லா இளஞர் கவளம் கைப்ப கல்தோய்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப .. ." எனக் குறிப்பிடுகிறது. இதன் பெருமளவினான தகவல்கள் ஆரேபியர் குறித்ததாக உள்ளது. எனவே அரேபிய இசுலாமியரின் தொழுகைக் குறிப்புக்களும் நடை உடை உடல்வலிமை பெண்டிரின் தண்மை வசிப்பிடம் மற்றும் பாதுகாப்புக் குறித்த தகவல்களும் விரிவாக இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தேவர்: இந்தியத் தொல்குடியல்லாத ஆரியர்கள், கிரேக்கர் முதலான அந்நியர், அந்நியருக்குப் பிறந்தோர், வழிவந்தோர். இவர்களையே வள்ளுவர்; 1073 மற்றும் 735ல் " தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவனசெய்தொழுக லான்" எனவும்; ஆரியக்குறும்பரை; "பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு." எனவும் குறிப்பிடுகிறார். எனவே தேவர் வேறு ஆரியக் குறும்பர் வேறு எனலாம். பல்லவர் மற்றும் சோழரின் சாசனங்களுள் உதயேந்திரம் சாசனம் இன்றைய உத்தரமேரூர்ப் பகுதியைக் குறிப்பதாகும். பிற்காலச்சோழர் சாசனங்களில் மிகவும் பழமையானது. இதனை வெளியிட்டவன் முதலாம் பராந்தகன் எனப்பட்ட மதுரை கொண்ட கோப்பரகேசரிபன்மன். இவனே வேலஞ்சேரிச் செப்பேட்டுச் சாசனமும் செய்தவன். பள்ளன் கோயில் சாசனதில் தானமாக வழங்கப்பட்ட வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகரநாட்டு அமண்சேர்க்கை எனும் ஊர், உத்தரமேருர் வட்டத்தில் இப்போதும் பெருநகர் என உள்ளது. அதில் குறிப்பிடப்படும் அமண்சேர்க்கை என்பதே அன்றைய அமணர் ஒன்றுசேர்ந்தபகுதி. உத்தரமேரூர் மிகவும் புதிரான பல வரலாற்று உண்மைகளைக் கொண்டது. இங்கு 35 கோயில்களுக்கு மேல் உள்ளன, பலநூற்றுக் கணக்கான கல்வெட்டுக்களும் உள்ளன. திருத்தனி வேலஞ்சேரிச் செப்பேடு பல வரலாற்றுத் தகவல்களைக் கொண்டது. கரிகால்சோழன் இமயமலையில் புலிக்கொடி நாட்டியதையும், காவேரி நதிக்குக் கரை எடுத்ததையும், காஞ்சியில் அரண்மணை உண்டாக்கி விரிவடையச் செய்ததையும் குறிப்பிடுவதோடு அவனது மற்றொரு பெயரான சோழவேந்தன் கோச்செங்கணண்ான் என்றபெயரும் உள்ளது. உத்தரமேரூரின் அமண்சேர்க்கையைத் தானம் கொடுத்த பராந்தகசோழன்,வீர சோழன் எனவும் பெயர்பெற்றுள்ளான். இவன் பல பட்டப்பெயர்களைக் கொண்டவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒற்றியூரன் என ஒருவனும் இடம்பெற்றுள்ளான். இவனே முன்னர் குறிப்பிட்ட சோழநாட்டுப் பெண், கரிகால்சோழனின் தங்கையைக் கெடுத்துக் கருவுறச் செய்தவன். காஞ்சிியின் தொண்டைநாடும், உத்தரமேரூரும் கரிகால்சோழனின் கட்டுப்பாட்டில் 24 கோட்டங்களாக இருந்தவை. ஒற்றியூரனை: "மருற்கொடுந் தொழில் மன்னவன் இறக்கிய வரியை நெருக்கி முன்திரு வொற்றியூர் நீங்கவென் றெழுதும் ஒருத்தர்" என; திருக்குறிப்புத்தொண்டர் புராணத்திலும், சுந்தரர் தேவாரத்திலும்; ஒற்றியூரன் எனச் செப்பேட்டிலும் இடம்பெற்று: "மண்ணுலகம் காவல்பூண்ட உரிமையாற் பல்லவர்க்குத் திரை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார் புலியூர்ச் சிற்றம்பலத் தெம் பெருமான்" எனவும்; சேத்கிழார் குறிப்பிடுகிறார். இளஞ்செட்சென்னியின் ஆட்சிக்கீழ், ஒற்றியூர், புலியூர்[சிதம்பரம்] இருந்தன. வரி விதித்ததில் பூசல் இருந்துள்ளது என்பதையும் புலியூர்ச் சிற்றம்பலத் தெம்பெருமான்- ஒற்றியூரன், கரிகால்சோழனால் குடியமர்த்தப்பட்ட பல்லவர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவன் என்பதையும் தொண்டை நாட்டைக் கைப்பற்றிக்கொண்டதையும் காண்கிறோம். புறத்திரட்டில்: "மண்ணுலார் தம்மைப்போல்வார் மாட்டாதே யன்றுவாய்மை நண்ணினார் திரத்துங்குற்றங் குற்றமே, நல்லவாகா; விண்ணுளார் புகழ்தற்கொத்த விழுமியோ னொற்றிபோழ்ந்த கண்ணுளான் கண்டந்தன்மேல் கறையையார் கறையன்றென்பார்." என ஒற்றி- ஒற்றியூரன், கண்டத்தில்- கழுத்தில் கறையுடையான் எனவும், இவனே திருத்தனி வேலஞ்சேரிச் செப்பேட்டில்"ஒற்றியூரன்" எனப்பட்டதையும் காண்கிறோம். "கறையார் மணிமிடற்றான் கபாளி கட்டங்கன்" எனத் தேவார நால்வரும் குறிப்பிடுகின்றனர். நச்சினார்க்கினியர் குறிப்பிட்ட தகவல்களில் இடம்பெற்றிருப்போர் அனைவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதற்கான சில விளக்கங்களை அவர்கொடுக்கும் தகவல்களின் துணையுடன் காண்போம். சேர இருத்தல்: மேற்கண்டோரையும் தென்னகத்தினருடன் சேர்த்து அமைதியுடன் வாழ வழிவகைகள் செய்தல். மேரு: அன்றைய சோழநாட்டில் இருந்த இன்றைய உத்தமேரூர். இந்தச்சேர்க்கையைத் தெற்கே உள்ள சேரநாட்டினர் எதிர்த்தனர். மேலே குறிப்பிட்ட இளைஞன் ஒற்றியூரனுக்கும் சிறுமிக்கும் திருமணம் செய்யும் முடிவால் சோழருடன் மைத்துன உறவுகொண்ட சேரர் எதிர்த்தனர் என்பதைப் பெரியபுராணம் தெளிவாக உணர்த்துகிறது. மேலும் ஆரியக் குறும்பரையும் தெற்கில் குடியமர்த்தும் முயற்சிக்கும் எதிர்ப்பு இருந்துள்ளது. சேர்த்துக்கொள்ளப்படுவோர் அனைவரும் எவ்வகையிலும் உறவினரல்ல. நாடோடிகளான செல்குடியினரையும் ஆரியக்குறும்பரையும் நிறுத்தவும் நிலைத்து ஒரே நாட்டில் அமைதியுடன் வாழச்செய்யவும் கரிகால்சோழன் முயன்றான் என்பதைப் பலபாடல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் சேர இருப்போரது நடத்தைகள் பெண்களை இழிவுபண்ணுபவை; வசிட்டரும் இதில் அடக்கம். பெண்ணும் மண்ணும் ஒன்றெனக் கண்ட, பெண்ணுக்கே மண் சொந்தமென எண்ணும் தென்னவருக்கு முற்றிலும் எதிரானவர்கள். இறையனார் களவியல் நூலும் அதன் பாயிரமும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அப்போது பாண்டியநாடு என்பதாக ஒன்று இல்லை. அகத்தியனார்: அகத்தியர் என 49 பேர் இருந்ததாகப் புறநாநூறு- 201ல் கபிலர் குறிப்பிடுகிறார். அகத்தியராக இருந்த தமிழரே விசுவாமித்திரர், கரவேல், கரிகால் போன்றோர். நச்சினார்க்கினியர் குறிப்பிடும் அகத்தியர் கரவேலனாக இருக்க வேண்டும். காரணம் சேர இருத்தல் சடங்குகு= வேள்வியை முன்நின்று நடத்தியவர் விசுவாமித்திரர் என்பதை வேதங்களும் இராமாயணமும் புராணங்களும் குறிப்பிடுகின்றன. புறநாநூறு- 166: "நன்றாய்ந்த நீள்நிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகா தொன்றுபுரிந்த ஈரிரண்டின் ஆறுஉ ணர்ந்த ஒருமுதுநூல் இகல்கண்டோர் மிகில்சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளீஇ மூவேழ்துறையும் முட்டின்றுபோஇய உரை சால் சிறப்பின் உரவோர் மருக......." என இப்பாடலில் முதுமுதல்வனாக இடம்பெற்றவரும் விசுவாமித்திரரே. கங்கையார்: கங்கைப்பகுதியைக் கைப்பற்றிய கிரேக்கரின் பெண்வழியில் சந்திரகொற்றனுக்குப் பிறந்தவர். கலித்தொகை-பாலைக்கலிப் பாடல் 25: "வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்" பிறந்தவர். மேற்கண்ட குறுந்தொகை- 7ல் சோழநாட்டு மன்னனின் பெண்ணுடன் சென்றவர். இப்பெண் சேரநாட்டவனுக்குரியவள்; கரிகால்சோழனின் தங்கை. இந்நிகழ்வுக்குப் பின்னர் கங்கையாருக்குப் பிறந்தவனே செங்குட்டுவன்; தாய் தொடியோள், மாஅயோள், காவிரிப்பாவை. காவிரியார்: கரிகால்சோழனின் தங்கை; காவிரிப்பாவை. யமதக்கினியார்: வசிட்டராகவும் தெரிகிறார்; சந்திரகொற்றனாகக் காண்பதற்கான சான்றுகள் அகப்படவில்லை. ஆயினும் யமதக்கினியின் மனைவி ரேணுகாவுக்கும் யமதக்கினிக்கும் ஐந்து புதல்வர்கள் உண்டு எனவும் கடைசியாகப் பிறந்தவனே பரசுராமன் எனவும் காணப்படுகிறது. நாரதரும் சூனசேபனும் கூட யமதக்கினியின் புதல்வர்களாகக் காணப்படுகின்றனர். வசிட்டன் என்ற ரிச்சிகனின் மனைவி சத்தியவதி எனவும் இந்தச்சத்தியவதியின் தாய்க்கும் காதிக்கும் பிறந்தவரே விசுவாமித்திரர் எனவும் சத்தியவதிக்குப் பிறந்தவரே யமதக்கினி எனவும் உள்ளது. எனவே விசுவாமித்திரரின் அக்காவை மணந்தவரே ரிச்சிகன் எனும் வசிட்டராகிறார். அவர்களது மகனே யமதக்கினி. இந்த யமதக்கினியை மணந்தவரே ரேணுகா. வசிட்டராகிய யமதக்கினியாரைக் கங்கையாரின் தந்தையாகக் காட்டி வரலாற்றை மாற்றி மறைக்க முயன்றுள்ளனர். காரணம் வசிட்டனுக்கும், முன்னர் குறிப்பிட்ட ஆரியவரசன் பிரகத்தனின் மனைவிக்கும் பிறந்த பெண்ணே சத்தியவதி என்னும் ஹெலன். இப்பெண்ணைச் சந்திரகொற்றனுடன் புணர விட்டுப் பிறப்பிக்கப்பட்டவனே கங்கையார் என்பதை மறைக்க முயன்றனர். இதனை எப்படியாவது தமிழருக்கு உணர்த்தவேண்டும் என முயன்றவரே நச்சினார்க்கினியர். இதற்காக அவர் பல வழிகளைக் கையாண்டுள்ளார் என்பதை அவரது உரைகளிலும் பாயிரக் குறிப்புக்களிலும் காணலாம். யமதக்கினியார் மகனார் திரண தூமாக்கினியார் என்னும் தொல்காப்பியன் என்பவனும் கங்கையார் எனப்பட்டவனே. இவனைப் பரசுராமன் எனப் பல தமிழ்ப்பாடல்களும் இதிகாச புராணங்களும் உணர்த்துகின்றன. புலத்தியனார்: வியாசனுக்குப் பிறந்த விதுரன்; செழியன் எனத் தமிழ்ப்பாடல்களில் இடம்பெற்ற இராவணன். இராமாயண மாந்தருள் விசுவாமித்திரனும் தசரத சேத்சென்னியும் இராம கரிகாலனும் பிராமணரல்ல; அசுரர் இனம். வசிட்டன், இந்திர பரசுராம ஒற்றியூரன் என்போர் சுரர் இனம் சார்ந்து பார்கவ பிராமணராக அறிவித்துக் கொண்டோர். இவ் இரு இனங்களிலும் சேராத செழிய இராவணன் நகுஷ விதுரன் புலத்தியன்; இராஜாஜி எழுதிய இராமாயணத்தில் பக்கம்395: இராவணனின் சபையில் சொல்லப்பட்டது: 'மயன் தங்களுக்குப் பயந்து நட்புக்கொண்டு தனது மகளையே விவாகம் செய்து கொடுத்தான் அல்லவா?'; (மயன் என்பவன் விதுரன்= எவ்வி; சேரலம் இலங்கைப்பகுதியை ஆட்சிசெய்த விசுவகர்மன்) பக்கம் 404: விபீசனன் சொன்னதைக்கேட்டு பொறுமை இழந்த இந்திரஜித்து: 'நம்முடையகுலம் என்ன? சக்தி என்ன? புலஸ்திய குலத்தில் பிறந்த சித்தப்பா இப்படிப்பேசுவது வியப்பாக இருக்கிறது'. மாபாரதத்தில் இராவண செழியன் விதுரன் சூத்திரன் என்பதை விராடபருவம் அத் 40ல் "விதுரன் சதுர்வருணத்தை" விவரிக்கிறான்; மற்றும் 41ல்: பிரம்மத்தைப்பற்றி திருத ராட்சசன் விதுரனைக் கேட்டபோது; 'நான் சூத்திரன் எனவே பிரம்மத்தைப் பற்றிப் பேசக்கூடாது" என்கிறான். ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணியிலும் இந்த இராவண விதுர புலத்தியன் இடம்பெற்றுள்ளான். குமரியார் உலோபமுத்திரையார்: இராவண விதுர செழிய புலத்தியனுடன் பிறந்த தங்கை. வியாசனின் மகளாக இருக்கலாம். இவளது நாடே குமரிப் பகுதியில் சேர்ந்திருந்த இன்றைய இலங்கையின் தென்பகுதி. அந்நாடு எவ்வி என்னும் விசுவகர்மன் என்னும் மயன் என்பவனால் ஆளப்பட்டது. அன்றைய மரபுப்படி இலங்கையும் இவளுக்குச் சொந்தமானதே. வியாசன் என்பவன் மேலே குறிப்பிட்ட சந்திரகொற்றனை மணப்பதற்கு முன்னர் பராசரனெனும் வசிட்டனுக்கும் ஹெலனுக்கும் இலங்கைத் தீவில் பிறந்தவன் என்பதை மாபாரதம் குறிப்பிடுகிறது. எனவே கங்கையார் எனப்பட்டவனும் வியாசன் எனப்பட்டவனும் ஒரே தாயான சத்தியவிதி என்னும் ஹெலனுக்குப் பிறந்தவர்களே. ஆயினும் வியாசன் ஒரு வசிட்டனுக்குப் பிறந்தவன். கங்கையார் என்பவன் சந்திரகொற்றனுக்குப் பிறந்தவன். கபிலர் புறாநாநூறு 202ல் " எவ்வி தொல்குடிப் படீஇயர்" எனக் குறிப்பிடுகிறார். குறுந்தொகை- 19. சூரிய(சோழ)னின் மறைவால் (நீக்கத்தால்) வாடும் பூக்களைப்போன்று; எவ்வி(மயன்=விசுவகர்மன்; இலங்கையில்) என்னும் மன்னனை இழந்த யாழ்ப்பான நாட்டார் வருந்தும் நிலையொப்ப உதவுவாரின்றி நானும் வாடுகின்றேன்" எனக் கரிகால்சோழனின் தங்கை புலம்புகிறாள். [மயன்=விசுவகர்மனின் பெண்ணைக் கெடுத்து இலங்கையைக் கைப்பற்றியவனே இராவண செழியன். அதங்கோட்டாசிரியர்: அவலோகிதர்; விசுவாமித்திரர்; அனைவரும் சேர்வதற்கான சடங்குகள் நடத்தப்பட்டபின்னர் சடங்குகளை= வேள்வியாக நடத்திய விசுவாமித்திரரைக் கண்டு களித்தபோது நடந்த உரையாடல் பின்னர் இடம்பெற்றது. அறிஞர் கால்டுவெல்: "அவலோகிதர் என்னும் போதிசத்துவர்-பொதியைப் பெரியார், இவரது இருப்பிடம் போதலகா எனப்பட்ட பொதியை மலைப்பகுதி" எனக் குறிப்பிடுகிறார். ஒரு தனிப்பாடல்: "ஆயுங் குணத்து அவலோகி தன்பக்கல் அகத்தியன் கேட்டு ஏயும் புவணிக்கு இயம்பிய தண்தமிழ் ஈங்கு உரைக்க நீயும் உளையோஎனில் கருடன்சென்ற நீள விசும்பின் ஈயும் பறக்கும் இதற்கு என் கொலோ சொல்லும் ஏந்திழையே!" எனக் குறிப்பிடுகிறது. பொதியை மலையைப் போதலகா எனக் குறிப்பிடுவதைக்காணும் போது; பலரும் இங்கு போதனை பெற்றுக் கல்விபயின்றதாகத் தெரிகிறது. அவளொகிதரிடம் தான் அகத்தியர் தமிழ் இலக்கணம் பயின்றதாகவும் காண்கிறோம். போதலகா என்பது போதி எனப் பௌத்தம் குறிப்பிடும் புத்தன்= கரிகால் நாடுகடத்தப்பட்டபோது சிறிதுகாலம் வாழ்ந்தபகுதியும் ஆகும். புறநாநூறு- 174; மாரோக்கத்து நப்பசலை. "...........பொய்யா நாவில் கபிலன் பாடிய மையணி நெடுவரை ஆங்கன் ஒய்யெனச் செருப்புகழ் மறவர் செல்புறம் கண்ட என்னறு சிறப்பின் முள்ளூர் மீமிசை அருவழி இருந்த பெருவிறல் வளவன் மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை புதுமையான் நிறுத்த புகழ்மேம் படுந!" என்கிறது. இதில் மதிமருள் என்பது சந்திரகுலத்தரையும் குறிப்பாக பாண்டிய செழியனையும் மருளச்செய்ததைக் குறிக்கும். புத்தன்= கரிகாலின் வரலாறு மிகநீண்டது; பின்னர் காண்போம். போதல் அகம் இதுவே. அதர்வவேதத்தில் கடல் கொள்கதையின் தலைவனாக "சத்யவ்ரதமனு 'இடம்பெறுகிறான், இவன் "திராவிட பதி" எனவும், மச்சபுராணத்தில் இத்திராவிடபதி; பொதிய மலையில் தவம் செய்யும் முனிவராகவும் காட்டப்படுகிறார். இச் சத்தியவிரதனே விசுவாமித்திரரால் வேங்கடத் திருப்பதியில் வேளிர் படையினருடன் குடியமர்த்தப்பட்ட கரவேல். அருவாளர்: அறிவாளராக இருந்தோர்; முதல்வசிட்டன்= அலெக்சாந்தனின் காலத்தில் இந்திய நாட்டின் வளர்ச்சியில் பங்குபெற்ற ஒரு பெரிய குழுவினர். அப்போது படைவலிமை தேவையற்றதாகக் கருதப்பட்டது. அலெக்சாந்தனால் கைப்பற்றப் பட்டு அருவாளராக= கொலைகாரர்களாக மாற்றப்பட்டவர்கள். சதபத பிராமணம்(மேற்கோள்-ஆன்டன்பர்கின் நூல் 'புத்தர் வாழ்க்கை' பக் 404): பாஞ்சால மன்னன் சோஹன்(சோழன்) சத்திரகன்[சோழன் சத்தியவிரதன் என்னும் திரிசங்குவுக்கு வேங்கடமலைக் காட்டில் விசுவாமித்திரர்) யாகம் செய்த போது தௌர்வசர்கள்[துர் என, பெயருக்கு முன்னர் ஒட்டாகக்கொண்ட வாசர்கள்(அனேகமாக மீன் வாடைகொண்டவர்கள்); சோழ சூரிய குலத்தருக்கு எதிரிகள்]ஆறாயிரம்பேர் கவசமணிந்து எழுந்து(எதிராக)நின்றனர்". எனக் குறிப்பிடுகிறது. நூல்- 'காஞ்சீபுரம் ஆலயங்கள்' பக். 7; யதோத்காரி கோயிலில் பள்ளிகொண்டுள்ள நிலையில் காணப்படும் சிலை, பண்டு புத்தர் சிலையாய் இருந்திருத்தல் கூடும்- A manual of Chingleput District, p. 113-114. சங்ககாலக் கச்சிமாநகரில் வெஃகா குறித்துப் பெரும்பாணாற்றுப்படை அடி373: "பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்"; திருமங்கைமன்னனின் பெரியதிருமொழி அடி 10.1-7: "பாந்தள்பாழியில் பள்ளிவிரும்பிய வேந்தனைச் சென்றுகாண்டும் வெஃகாவுளே". பள்ளிக்கு அருகில் வெஃகா எனும் வேகவதியாறு பாய்ந்திருந்தது; அப்பள்ளிக்கோயில் வெஃகாக்கோயில் என வரலற்றில் உள்ளது. காஞ்சித்தல வரலாற்றில்: "திருவெஃகா கோயிலருகில் பிரமன் தவம்செய்து கொண்டிருந்தான். தவத்தைக் கெடுக்க அவனது மனைவி சரசுவதி, வெஃகா என்னும் ஆற்றுவடிவில் வெள்ளப்பெருக்குடன் வந்தாள். வெள்ளத்தைக் விஷ்ணுவைத் தடுக்கும்படி வேண்ட, விஷ்ணுவும் ஆடையின்றி அணையைப்போலப் படுத்துப் பள்ளிகொண்டான். மாமனாரின் செயலைக் கண்டு நாணிய கலைமகள் தனது போக்கை மாற்றிக்கொண்டாள்" என உள்ளது. அதனால் அந்நதி கிழக்குநோக்கி வேகமாக ஓடியதால் வேகவதி எனப்பட்டது; யதோத்காரி கோயிலுக்குத் தெற்கில் ஓடையில் கலக்கிறது. இதில் விஷ்ணு எனக் குறிக்கப்பட்டவன் சந்திரகொற்றன் -விஷ்ணு. பிரமா எனக் குறிக்கப்பட்டவன் விசுவாமித்திரன்; இவ் வரலாறு சற்றே மாறுபட்டு வடமொழி நூல்களில் வசிட்டனுக்கும் விசுவாமித்திரனுக்குமான போர்களில் வெளிப்படுகின்றன. மாபாரதம் சல்யபருவம்:விசுவாமித்திரருக்கும் மித்திர வருணனின் மகன் வசிட்டனுக்கும் நடந்த பூசலில் இடம்பெறும் சரசுவதி நதி குறித்து வசிட்டன்: "சரசுவதி நதியே! பிரமாவிடமிருந்து உற்பத்தியாகும் நீ கிளைநதிகளாகி உலகம் முழுவது படர்ந்து பரவுகிறாய்; அனைத்து நீர்நிலைகளிலும் உள்ளாய்; இதனால் நாங்கள் அறிவது 'நீயே புகழ், முழு நிறைவுடைய பொருள், உயிர்தரும் ஊட்டம், ஒளி, அறிவு, மொழி, ஸ்வகா என உள்ளாய்; உலகம் உனது ஆளுகைக்கு உட்பட்டது; நான்கு வடிவங்களில் (?) எல்லா உயிர்களிடத்திலும் குடிகொண்டுள்ளாய்' என்கிறான். வசிட்டனைக் கொண்டு சென்ற சரசுவதிநதி விசுவாமித்திரன் தவத்தில் ஈடுபட்டிருந்தபோது வசிட்டரைக் கொலையாவதில் இருந்து கிழக்குநோக்கி வேகமாகச் சென்று காப்பாற்றியது. சினமடைந்த விசுவாமித்திரர் சரசுவதி நதியைச் சபித்தார். ராட்சதர்களால் சரசுவதி நதி கையாளப்பட்டு இரத்தக்கறைகளுடன் சிவப்பு நிறமானது. அமைதியை இழந்தது. என உள்ளது. இவ்விரண்டு நிகழ்வுகளும் படிமங்களாக வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. இவற்றில் நதி எனக் குறிப்பிடப்படும் சரசுவதி- வெஃகாநதி- வேகவதி என்பது தொல்தமிழ்ப்பாடல்களில் இடம்பெறும் அறிவாளர் அருவாளராக மாறியதைக் குறிக்கும். சந்திரகுப்தனுக்கு முன்னர் படைவலிமை தேவையற்றிருந்த காலத்தின் சான்றோர் கூட்டமாக இருந்தோரே அறிவாளர். வசிட்டன்- கிரேக்கத்தின் அலெக்சாந்தனின் வரவால் அவனைச்சார்ந்து ஒரு பிரிவினர் வாழத்தொடங்கினர் என்பதையே மேற்படி தகவல்கள் உணர்த்துகின்றன. இவ் அறிவாளர் படையே கோசர்படை என அந்நியருக்கு அடிமையாகி அருவாளராக மாறி, இராவண- செழியனுக்கும் அடிமையாக, ராட்சதர்களாக இரத்தகறை படிந்து சிறுமைப்பட்டனர். இவ் அறிவாளர்களே திருமால் -கரிகாலனின் வெற்றியால் "தொல் அருவாளர் தொழில் கேட்ப" எனச் சோழனுக்குப் பணிந்து மீண்டும் சோழருடன் சேர்ந்து அறிவாளராக வாழும்நிலையை அடைந்தனர் என்பதைப் பட்டினப்பாலையில் காண்கிறோம். எனவே இப்பகுதியில் செங்குட்டுவனின் தந்தையின் தாத்தா அலெக்சாந்த வசிட்டனுக்கும் விசுவாமித்திரனின் தந்தை? சந்திரகுப்தனுக்கும் பகை இருந்தெனக் காண்கிறோம். இப்பகுதியில் திருக்காளிமேடு என இன்றும் ஒரு பகுதி மேடாக உள்ளது. இதுவே செங்குட்டுவனின் தாய் வாழ்ந்த காமகோட்டமாக இருக்கக்கூடும். இப்பகுதியில் அரவணன் சேரி எனவும் அறப்பெருஞ் செல்வி தெரு எனவும் இடங்கள் உள்ளன. சேத்கிழார் குறிப்பிடும் 32 அறங்களை வளர்த்த செங்குட்டுவ முருகனின் தாய் வாழ்ந்த பகுதியெனத்தெரிகிறது. செங்குட்டுவனின் தாயை அம்பிகை எனப் பெயரை மாற்றியுள்ளனர். வேளிர் பதினெண்குடியினர்: வேளிர் 49 வழிமுறைக்கு அதாவது இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டு முதல் அகத்தியருடன் வழிவழியாய வாழ்ந்தவர்கள். சந்திரகுப்தனால் மீண்டும் உருவாக்கப்பட்ட போர்ப்படையின் 18ப் பிரிவினர். இப்படையினரின் சில பிரிவுகள் கங்கையாரால் கைப்பற்றப்பட்டனர். காரணம் இப்படையின் தலைவனான சந்திரகொற்றனே கங்கையாரின் தந்தை. இவ்வேளிர்பதினெண் குடியினரும் அவர்களது குடும்பத்தாரும் சந்திரகொற்றனை வசிட்டன் நாடுகடத்தியபோது இன்றைய சிரமண பெளுகொளா என்னும் பகுதிக்கு வந்துவிட்டனர். விசுவாமித்திரனின் பாதுகாப்பிலும் இருந்தனர். கரவேலனும் வசிட்ட அலெக்சாந்தனால் நாடுகடத்தப்பட்டபோது இவ்வேளிர் படையின் உதவியுடன் வேங்கட மலைக் காட்டுப்பகுதியில் ஒரு நகரத்தை உருவாக்கிக் குடியமர்த்திக் கரவேலனை அந்நகருக்கு அரசனாக்கினார் விசுவாமித்திரர். இதனை வசிட்ட அலெக்சாந்தனும் பிம்பிசார கங்கையாரும் ஏற்கவில்லை. விசுவாமித்திரருக்கு எதிராகப் பூசலிட்டனர். இந்நிலையில் கரவேலன் திரிசங்கு சொர்க்கத்தின் தலைவனாக அறிவிக்கப்பட்டான். சொர்க்கமான மகதத்துக்கும் நரகமான துவாரகைக்கும் இடைப்பட்ட அந்தரத்தில் இந்நகரம் அமைந்ததால் அந்தர = திரிசங்குசொர்க்கம் எனப்பட்டது, இதுவே இன்றைய அந்தர= ஆந்தரதேசத்தின் திருப்பதி. முன்னர் தண்டகாரன்யக் காட்டுப்பகுதியாக பசுக்களையும் கால்நடைகளையும் பாதுகாத்து வளர்க்கும் அடர்ந்த காடாக இருந்தது. இராக்கதர்: இராவண விதுர செழியனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சிங்கள ராட்சசர்கள். இராமாயணத்தில் இவர்களை ஒழிக்க அகத்தியர் கரவேலிடடம் சென்று செண்டு என்ற வேளிர்படையை இராமன்= கரிகாலும் இலக்குவ செங்குட்டுவனும் பெற்றதாக உள்ளது. மேலும் இப்படையின் சிலபிரிவினரைக் கைப்பற்றி வைத்திருந்த இந்திரன்= கங்கையாரை இமையம் சென்று வீழ்த்தியதை மறைத்துத் தபசுசெய்து அர்ச்சுனன் =செங்குட்டுவன் பெற்றுவந்ததாக மாபாரதம் குறிப்பிடுகிறது. "தேவர், சேர இருத்தல், மேரு, தென்றிசை, அகத்தியனார், கங்கையார், காவிரியார், யமதக்கினியார், அவர் மகனார் திரண தூமாக்கினியார், புலத்தியனார், அவருடன் பிறந்த குமரியார் உலோப முத்திரையார், துவராபதி, நிலங்கடந்த நெடுமுடி யண்ணல், அரசர்பதினெண்மர், பதினெண்குடி வேளிர், அருவாளர், காடுகெடுத்து நாடாக்கி, பொதி, இராவணன், இராக்கதர், திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனார், அதங்கோட்டாசிரியர் குறித்த தகவல்களைச் சுருக்கமாகக் காண்டோம். "இராவணனைக் காந்தருவத்தாற் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித் திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி 'நீசென்று குமரியாரைக் கொண்டுவருக' எனக்கூற அவரும் 'எம்பெருமாட்டியை எங்ஙனம் கொண்டு வருவல்' என்றார்க்கு 'முன்னாகப் பின்னாக நாற்கால் நீளம் அகல நின்று கொண்டு வருக' என அவரும் அங்ஙனம் கொண்டு வருவழி வைகை நீர் கடுகிக் குமரியாரை ஈர்த்துக் கொண்டுபோகத் தொல்காப்பியனார் கட்டலை யிறந்து சென்று ஓர் வெதிர்கோலை முறித்து நீட்ட அது பற்றி யேறினார். 'அதுகுற்றம்' என்று அகத்தியனார் குமரியாரையும் தொல்காப்பியனாரை யும் 'சுவர்க்கம் புகாப்பீர்' எனச் சபித்தார். 'யாங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையால் எம் பெருமானும் சுவர்க்கம் புகாப்பீர்' என அவர் அகத்தினாரைச் சபித்தார். அதனால் வெகுண்ட அகத்தியனார், அதங்கோட்டாசிரியரை நோக்கி 'நீ தொல்காப்பியன் செய்த நூலைக் கேளற்க' என்றார்." என்பதற்கான விளக்கங்கள் வரலாறு முழுதையும் உள்ளடக்கியவை. ஆயினும் இராவணன் கரிகால்சோழ இராமனாலும் இலக்குவன் மற்றும் அனுமன் என்னும் செங் குட்டுவனாலும் அடக்கப்பட்டான் என்பதே பாதி வரலாறு. அதன்பின்னர் கங்கையார் பரசுராமனாகவும் துர்யோதனனாகவும் பெயர் மாற்றப்பட்டுக் கரவேலன்= கிருஷ்ணனாலும் தருமன்= யுதிற்றன் எனக் கரிகால்வளவனாலும், அவனது மகன் அர்ச்சுனன் எனச் செங்குட்டுவனாலும் அடக்கப்பட்டான்; பின்னர் அசோகனாகப் பத்து ஆண்டுகளுக்கு அடங்கிக்கிடந்து இறந்தான் என்பதும் மிக நீண்ட வரலாறாக உள்ளன. பதிற்றுப்பத்து: 43:"கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை வடதிசை எல்லை இமைய மாகத் தென்னங் குமாரியொடு ஆயிடை அரசர் முரசுடப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச் சொல்புனல் நாட்டைத் தொல்கவின் தொலைத்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ.. .. அருஞ்செலல் பேராற்ற் றிருங்கரை உடைத்துக்.. .. கடியேர் பூட்டுநர் கடுக்கை மலைய. .. 46: "பல்செருக் கடந்த கொல்களிற்று யானைக் கோடுநரல் பௌவம் கலங்க வேலிட்டு உடைதிரைப் பரப்பில் படுகடல் ஓட்டிய வெல்புகழ்க் குட்டுவன் கண்டோர் செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே" "கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனைக் கரணம மைந்த காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு" என செங்குட்டுவன் குமரி- தொடியோள் பௌவம் முதல் வடதிசை இமையம் வரை வெண்று .அனைவரையும் ஒன்றுசேரச் செய்தான் எனக் காண்கிறோம். பியதர்சி என்ற செங்குட்டுவனால், விசுவாமித்திரன் கரவேலன் மற்றும் கரிகாலன் ஆகிய கடவுளரின் கட்டளைப்படி, சிங்கத்தலைத்தூணில் 14ஆவதாக அசோகன் என்னும் செங்குட்டுவனின் தந்தையாரால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு: This inscription of Dhamma was engraved at the command of the Beloved of the Gods, the king Piyadassi. It exists in abridged, medium length, and extended versions, for each clause has not been engraved everywhere. Since the empire is large, much has been engraved and much has yet to be engraved. There is considerable repetition because of the beauty of certain topics, and in order that the people may conform to them. In some places it may be inaccurately engraved, whether by the omission of a passage or by lack of attention, or by the error of the engraver. தொல்காப்பியன் செய்த நூல்: இறையனார் களவியல்; இது அகத்தியர்களான விசுவாமித்திரர், கரவேல், கரிகால் ஆகியோரால் உருவாகி வளர்ச்சி பெற்று ஐந்தறம் என இருந்தது. இதனைச் சிதைத்துத் தொல்காப்பியமாகவும் பின்னர் இறையானார் களவியலாகவும் மாற்றிய ஆதிக்க சக்திகளை அடையாளப்படுத்தும் நச்சினார்க்கினியரின் உத்தி- வழி. பெண்ணை இழிவுபடுத்தவும் அவளது காதலை ஒரு பொருட்டாகக் கருதத்தேவை இல்லை; கற்பையும் மதிக்கத் தேவையில்லை என்பதை நிறுவ அனைத்து இலக்கண நூல்களையும் சித்தைத்து உருவாக்கப்பட்டவையே தொல்காப்பியம் மற்றும் இறையனார் களவியல். களவியல் நூலின் பாயிரம் கொடுக்கும் தகவல்களைக் காண்போம்: "பெண் என்பது ஏற்புச் சட்டகம், மூடக்குரம்பை, புழுப்பிண்டம்; ஐயும், பித்தும், வளியும், குற்றும், கொழுவும், புரனியும், நரம்பும், மூத்திர புரீடங்களும் என்று, இவற்றது இயைபு பொருளன்று; பொருளாயின், பூவே, சாந்தே, பாகே, எண்ணமே, அணிகலனே என்றிவ்வாற்றாற் புனையவேண்டா, தான் இயல்பாகவே நன்றாயின்; என்று அதன் அசுபத்தன்மை உரைப்பக் கேட்டு நீங்குவர்" எனப் பெண்ணையும் அவளது கற்பையும் இழிவுபடுத்தினர். பிராமணரின் பெண்குறித்த சாத்திரக் கருத்துகள் எந்த அளவு வீரி யத்துடன் தமிழில் புகுத்தப்பட்டுள்ளன என்பதற்கு இது ஒரு சிறுசான்றாகும்.

No comments:

Post a Comment