Tuesday 14 October 2014

சுமேரியர் - சுமேரியநாடு - மேரு - இந்திய மேரு நாடுகள்!

சுமேரியர் - சுமேரியநாடு - மேரு - இந்திய மேரு நாடுகள்! மேரியர்களே - மௌரியர் எனப்பட்டனர்; சந்திரகுப்தன் மௌரியனல்ல! சத்தியவதி என்ற ஹெலனுக்கும் சந்திரகொற்றனுக்கும் பிறந்ததாகக் கருதப்படும் பிம்பிசாரனே மௌரியன்; ஆரியனின் மனைவிக்கும் அலெக்சாந்தனுக்கும் பிறந்ததாகக் கருதப்படும் பெண்ணே ஹெலன் என்ற சத்தியவதி. அவளுக்குப் பிறந்த பிம்பிசாரன் எனப்பட்டவனை ஆரியரும் யூதரும் ஏற்கவில்லை. பிம்பிசாரனின் மகனான செங்குட்டுவனை ஏசுவாக ஏற்றுக்கொண்டோரும் பிம்பிசாரனை ஏசுவின் மதத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே ஓரிறைக்கொள்கையை அல்லாவை அல்லஃசாந்தாவை ஏகைறைவனாகவும் தன்னை இறுதி இறுதி இறைத்தூதனாகவும் அறிவித்து அனைவர்மீதும் போர்தொடுத்தவன் முகம்மது எனத்தெரிகிறது! ஏக் ஆம் பரன் எனத் தமிழில்[?] அவனைக் குறிப்பிடுகின்றனர். அந்த மாம்பழத்தின் மாங்கொட்டையே பிளக்கப்பட்டு அதன் உள்ளே இருக்கும் பருப்பு முகம்மதியரால் காட்டப்படுகிறது[!?!?] சு என்ற முன் ஒட்டு சேர்ந்த பெயர்கள் பல உள்ளன. அவற்றில் சில: சு பிரமன்= சுப்ரமன் -சுப்ரமண்யன்; சு தாசன்= சுதாசன்; சு வர்க்கம்= சுவர்க்கம்; சு தந்திரம்=சுதந்திரம்; சு குமார்= சுகுமர்; சு கன்யா= சுகன்யா; சு ப்ரபாதம்= சுப்ரபாதம்; சு மித்ரா= சுமித்ரா; சு மதி= சுமதி; சு மேரு= சுமேரு. இவற்றில் மேரு என்பதாக நமது புராண இதிகாச வேதங்களில் பல இடங்கள் குறிப்பிடப்படுகின்றன! அவற்றுள் நமது உத்தெரமேரு என்ற ஊரும் ஒன்று! திருநெல்வேலியிலும் ஆந்திரத்திலும்கூட மேரு இருந்துள்ளது! இவற்றுக்கெல்லாம் மேலானதாக அல்லது தலைமை இடமாக இருந்த பகுதியே சுமேரு; அதுவே அன்றைய அலெக்சாந்திரியா எனவும் துருவம் எனவும் நெற்றிக்கண் எனவும் குறிக்கப்பட்ட இமையமலையின் அடிவாரத்தில் மேற்கு எல்லையில் உள்ள பகுதி; சுமேரு எனப்பட்டது! சுமேரியர் குறித்து சுமேரியநாட்டில் பல பழமையான புராணங்களும் உள்ளன! நமது நாட்டுக்கும் சுமேரியநாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படக்காரணமே பராசரன் எனப்பட்டவனே; ஆயினும் இந்தப்பராசரனை எவரும் இன்றுவரை வெளிப்படுத்தவில்லை. அவனுக்கும் மச்சகந்தி - பரிமலகந்தி - சத்தியவதி எனப்பட்ட பெண்ணுக்கும் இலங்கைத்தீவில் புணர்ப்பு உண்டானதால் பிறந்தவனே மாபாரதத்தையு எழுதியதோடு அன்றைய வேதங்களையும் தொகுத்த வியாசன்! அடுத்து அலெக்சாந்தா என்ற பெயரில் மூவர் இங்குவந்துள்ளனர். நந்தர் எனப்பட்டனர் எனத்தெரிகிறது! மேலும் அவர்களுக்குத் தென்னகச்சோழருடன் ஏற்பட்ட உறவுக்குக் காரணமானவனே அல்லஃநந்தாவின் வளர்ப்புமகனாகக் கருதப்பட்ட பிம்பிசாரன்! பிம்பிசாரனே பலபெயர்களில் வேத இதிகாச புராணங்களிலும் இடம்பெற்றுள்ளான். அவனது மகனே சுப்ரமன்= சுப்ரமணி எனப்பட்ட செவ்வேல் செங்குட்டுவன் கந்தன்! ஆயினும் இவனே அஜாதச்சத்ரு எனவும் உள்ளான். அசோகன் சங்கரன் எனவும் காணப்படுகிறான்! குஜரத் முதல் வங்கத்தின் கிழக்குப்பகுதிவரை அடங்கியதே அன்றைய தமிழகமாகும். அன்றைய தென்னகம் என்பது தமிழைத்தாய்மொழியாகக்கொண்டது. அதன் வட எல்லையாக விந்தியமலையே இருந்தது. மதராஸ் ராஜதானி எனப்பட்டதும்; அன்றைய கலிங்கத்தின் காரவேலன் ஆட்சிசெய்த இன்றைய ஒடிஸ்சாவையும் உள்ளடக்கியதே! மேற்கண்ட அலெக்சாந்தருடன் வந்துசேர்ந்த ஆரியரும் திராவிடரும் வந்தபின்னரே வடவேங்கடம் தென்குமரி ஆகியவை தமிழகத்தின் எல்லைகளாகச் செங்குட்டுவனின் காலத்தில் அமைக்கப்பட்டன. எஞ்சிய பகுதிகள் திராவிடருக்கெனவும்; அதற்கும் வடக்கே உள்ள பகுதிகள் வடவர் எனப்பட்டோருக்கும் செங்குட்டுவனின் தந்தை சங்கரனைச்சார்ந்தோருக்கும் அன்றைய செங்குட்டுவன் - அசோகனாலேயே கொடுக்கப்பட்டன! ஆதிசங்கரன்- செங்குட்டுவன் தன்னைத் தந்தைவழியில் திராவிட சிசு எனக் குறிப்பிட்டிருந்தபோதிலும் தமிழனாகவே தனது தாயைச்சார்ந்து தாய்மாமன் கரிகால்சோழனுடன் நந்தர்களுக்கு எதிராக அநந்தனாக வாழ்ந்தவன் செங்குட்டுவ அசோக அஜாதச்சத்ரு. நமது தத்துவங்களின் முன்னோர் சங்கரனையும் ஆதிசங்கரனையும் பிரித்தறிய இயலாதபடி குழப்பி பெயர்களையும் மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குமரிளபட்டர் என்பவரே செங்குட்டுவன் என்பதை நம்மால் நிறுவமுடியும்! செங்குட்டுவனது தந்தை சங்கரன்- பிம்பிசாரன் குறித்த வரலாற்றை அறிய; சுமேரியரின் வரலாற்றில் உள்ள நமது வரலாற்றைப் பிரித்தெடுத்தாலே பெறமுடியும்! காரணம் செங்குட்டுவனது தாய்; சுமேரியநாட்டுக்குச் சென்று; பிம்பிசாரனான - கில்காமேசின் மகனே செங்குட்டுவன் என்பதை நிறுவப் போராடிய தகவல்கள் அங்கு இருக்கக்கூடும். பல ஓவியங்களும் புடைப்புச்சிற்பங்களும் சிற்பங்களும் இதனை உறுதிப்படுத்துவனவாக அங்கு உள்ளன! கரிகால்சோழனின் தங்கை தனது சிலம்புபோன்ற ஒரு பொருளுடன் சில ஆட்சியாளரின் முன்நிலையில் தனது மகனுடன் இருப்பதாகவும் அவை உள்ளன. மகனை மடியில் வைத்திருப்பதுபோலவும் பல உள்ளன! எனவே மேரு எனப்பட்ட பகுதிகளுக்குத் தலைமை இடமாக சுமேரு- அன்றைய சுமேரியநாடு இருந்திருக்கக்கூடும் என்பதை நிறுவியாகவேண்டும்! இதுகுறித்துத் தகவல் அறிந்தோர அவற்றைப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்! வரலாறற்ற தமிழனுக்கு வரலாறு உள்ளது என்பதை நிறுவியாகவேண்டும்!

No comments:

Post a Comment