Monday 10 November 2014

"21 தலைமுறைகளில் ஒரு இனத்தை அழிப்பேன்" - பரசுராமன்.

"21 தலைமுறைகளில் ஒரு இனத்தை அழிப்பேன்" - பரசுராமன். மறைந்துபோன உலகவரலாறு இந்த 21 தலைமுறைக்குள் அடக்கம்! அது; வரலாற்றிலேயே இல்லாத 60 ஆண்டுகள்முதல் 1260 ஆண்டுகள்வரை இருக்கக்கூடும்! நிச்சயமாக வரலாற்றில் இல்லாத 560 ஆண்டுகள் முதல் 1260 ஆண்டுகளை உள்ளடக்கியது! இந்த மேல் அளவீடான 1260 ஆண்டுகளுக்குப் பிறகான இன்றைய 2014 ஆண்டுக்கு இடைப்பட்ட 754 ஆண்டுகளுக்கு மட்டுமே ஒவ்வொருநாட்டுக்குமான வரலாற்றை உண்மை வரலாற்றின் அடிப்படையில் கட்டமைக்கமுடியும்! அதற்குமுன்னரான உலகவரலாறும் பாரத் - பாரத வரலாறும் மதங்களுக்குள் புதைந்துவிட்டன! அவற்றைக் கட்டமைப்பதென்பது ஒருசிலரால் மட்டுமே இயலும்! புருஷோத்தமன் என ஒருவர் இருந்தாரா? போரஸ் என ஒருவர், சந்திரகொற்றனின் தந்தையாக வரலாற்றில் உள்ளார்! புருஷ் - புருஷன் என ஒருவர் ரிக்வேதத்தில் உள்ளார்! நான்முகன் = பிரம்மா என ஒருவர் இருந்தாரா? விசுவாமித்திரர் என வேத இதிகாச புராணங்களில் பிரம்மாவாகத் தெரிகிறார்! இவரே பெருமால் எனப்பட்டுள்ளார்! சூரியகுலச்சோழருக்குப் பிறந்து உயர்ந்த நிலையை அடைந்தவர்! விஷ்ணு என ஒருவர் இருந்தாரா? முதலில் குறிப்பிடப்பட்ட புருஷோத்தமரே விஷ்ணுவாகத் தெரிகிறார்! கிருஷ்ணன் = கண்ணன் என ஒருவர் இருந்தாரா? கார்வேல் = கார்வண்ணன் = நீலமேகன் = கண்ணன் என ஒருவர் வரலாற்றிலும் கல்வெட்டுக்களிலும் உள்ளார்! சந்திரகொற்றனின் மகனாகவும் தெரிகிறார்! திருமால் என ஒருவர் இருந்தாரா? திருமா வளவன் = கரிகால்சோழன் என ஒருவர் தொல்தமிழ்ப்பாடல்களிலும் கல்வெட்டுக்களிலும் பட்டயங்களிலும் உள்ளார்! அம்பா = பார்வதி= உமா என ஒருவர் இருந்தாரா? அம்பா என ஒருவர் மாபாரதத்தில் உள்ளார்! இவரையே பார்வதி எனவும் உமா எனவும் குறிப்பிடுகின்றனர்! உமா என- அமணத்தில் உமாஸ்வாதி என ஓறூவறர் உள்ளார்! மாயா எனவும் உஷை எனவும் கொற்றவை எனவும் பலபெயர்களில் இடம்பெற்ற முதல் பெண்ணாக உள்ளார்! ரிக்வேதத்தில் உள்ள ஊர்வசி - உஷை என்பவரும் இவரே எனத்தெரிகிறார்! செவ்வேல் முருகன் என ஒருவர் இருந்தாரா? சிலப்பதிகாரத்திலும் தொல்தமிழ்ப்பாடல்களிலும் முருகன் உள்ளார்! சிலப்பதிகாரத்தில் உள்ள செங்குட்டுவனே முருகனாகவும் தெரிகிறார். செங்குட்டுவனின் குணநலன்களே முருகனுக்கும் காட்டப்படுகின்றன! இறையனார் என ஒருவர் இருந்தாரா? இறவன் என ஒருவர் இதிகாச புராண தொல்தமிழ்ப்பாடல்களிலும் உள்ளார்! இறையனார் என ஒரு புலவரும் உள்ளார். இறையனார் இயற்றியதாக அகப்பொருள் நூலொன்று 60 சூத்திரங்களுடனும் பாயிரம் சிறப்புப்பாயிரம் என சேர்க்கப்பட்டதாக உள்ளது! பைங்கட்பார்ப்பான் என தொல்தமிழ்ப்பாடல்களிலும் புராணங்களிலும் இடம்பெறும் முருகனின் தந்தை; மதுரை ஆலவாயில் அழனிறக்கடவுள் இதனை மூன்று செப்பிதழ்களில் எழுதியதாகவும் உள்ளது! உப்பூரிக்கிழ்ழன் மகன் உருத்திரசம்மன் பைங்கண்ணன் புன்மயிரான் ஐயாட்டைப்பிராயத்தான் மூங்கைப்பிள்ளை குமாரதெய்வம் சாபத்தினால் பிறந்தவன் என ஒரு ஊமைக்குழந்தை இச்சூத்திரங்களுக்கான உரையைக்கேட்டதாகவும் அதில் காணப்படுகிறது! இதன் காலம் கடைச்சங்ககாலம் என உரைப்பாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்! இதில் முச்சங்கங்கள் குறித்த முறன்பட்ட தகவல்களும் உள்ளன! எழுதப்பட்டகாளத்துக்குப்பிறகு பத்துத்தலைமுறை கழிந்தபின்னர் வெளிப்பட்டதாகவும் வழிவழியாகச் செவிவழி கேட்டுப் பின்னர் எழுதப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். திரு.கே.எம்.சிவராசபிள்ளை அவர்களின் நூல் ????? 1932ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. அதில் "முச்சங்கவரலாறு குறித்த இறையனார் அகப்பொருள் உரையும், களவியல் நூலும் கட்டுக்கதையாக வெளி வந்தன. தமிழை அமணர்கள் கையாண்டு சிறப்பாக வெளிப்படுத்தியபோது; தமிழ் உச்ச வளர்ச்சியை அடைந்தது. தமிழ், தங்கள் தெய்வீக பாஷை என அவர்களைத் தடுத்து நிறுத்தி, தமிழில் வந்த அனைத்து நூல்களையும் கைப்பற்றி பிராமணரின் துணையுடன் சைவநெறியினர் தங்கள் விருப்பம்போல் கையாண்டனர்...” என உள்ளது! அல்லா என ஒருவர் இருந்தாரா? அல்லெக்சாந்தர் மூவர் இருந்ததாக வரலாற்றில் தெரிகிறது! அவர்களுள் ஒருவரே அல்லா எனத்தெரிகிறது! ஒவ்வொருவராக அவர்கள் அராபிய - மேற்காசியநாட்டிலிருந்து இந்தியாமீது படைநடத்தி வென்று காஷ்மீரில் அல்லஃநந்தா நதியையும் உத்திரப்பிரதேசத்தில் அல்லாஃபாத் என்ற நகரத்தையும் உருவாக்கி கங்கைநதியின்மீது ஆதிக்கம் செய்ததாகத் தெரிகிறது! இந்திரன் என ரிக்வேதத்திலும் ஒருவர் காணப்படுகிறார்! அல்லஃசாந்திரியா என்ற தலைமையிடத்தைக் காஷ்மீரில் - இமையமலையின் மேற்கு எல்லையின் அடிவாரத்தில் உருவாக்கியதாக பெரிப்ப்ளுசின் பயணநூலில் காணப்படுகிறது. அந்நூலில் காணப்படும் தகவல்களைக்கொண்டு அல்லஃசாந்தாவும் பயணியும் பயனம்செய்த வழித்தடத்தை ஒரு வரைப்படமாக உலகவரைப்படத்தில் காட்டியுள்ளனர். இத்தாலி எகிப்த்திலிருந்து பலநாடுகள் வழியாக பாரத் எனப்பட்ட பாரதத்தின் தென்பகுதிமுதல் இமையத்தின் வடக்கே இன்றைய சீனநாடுவரை சென்றதாக அதில் குறீப்பிட்டுள்ளனர். அந்நூல் முழுமையாகக்கிடைக்காமல் சிதைந்தே கிடைத்துள்ளது! முகம்மது என ஒருவர் இருந்தாரா? முகம்மது என ஒருவர் இருந்ததற்கான சான்றுகள் முகம்மதியரின் நூல்களில் மட்டுமே உள்ளன! மக்காவீரரைப்போலவே தன்னை அல்லாவின் இறுத்தி இறைத்தூதர் என அறிவித்துக்கொண்டார்! இஸ்ரேலின் Dome of the Rock இல் எழுதப்பட்டிருக்கும் குரான் வசனமே 691இல்தான் எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் குரான் வசனமாக இருக்க வேண்டிய தேவையும் இல்லை. இந்த குரான் வசனமே (dome of rock கல்வெட்டு) அரபு ராணுவம் தங்கள் அருகாமை நாடுகளை குரானில் அடிப்படையில் உந்தப்பட்டு ஆக்கிரமிக்க கிளம்பி 60 ஆண்டுகளுக்கு பின்னர் எழுதப்படுகிறது. இதுவே முதல் வரலாற்று ரீதியான குரான் வசன கல்வெட்டு. 7- 8ஆம் நூற்றாண்டுகளில்தான் முகம்மதியரின் இந்தியப்படையெடுப்பு துவங்குகிறது! உலகவரலாற்றாளர்கள் அனைவரும்; உலகநாட்டு மக்களெல்லம் இவ்விரு நூற்றாண்டுகளில் கொந்தளிப்பான நிலையில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். சேரமான் மசூதி எனச் சேரலத்தில் ஒன்று உள்ளது! சேரமான் இஸ்லாமுக்கு மதம் மாறினார் என்று ஒரு தகவலும் உள்ளது! சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்தவர். ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள். என ஒரு கட்டுக்கதையும் உள்ளது! எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் கிபி 632இல் இறந்துவிட்டவராக கூறப்படும் முகம்மது செய்த அதிசயத்தை எப்படி பார்த்திருக்க முடியும்? சைவம், சாணக்கியம், புத்தம், ஜைனம் போன்ற மதங்களை எதிர்கொண்ட ஆழ்வார்கள் இஸ்லாமைப் பற்றி ஒரு வரி கூடக்கூறவில்லை; நாயன்மார்களும் எதுவும் குறிப்பிடவில்லை! நிலவு என்பது சந்திரகுலத்தோரையே குறிக்கும்; இவர்கள் அனைவரும் சூரிய குலச்சோழருக்கு எதிரானவர்கள். மேற்காசியநாடுகளில் வாழ்ந்த ஒரு கலப்பினத்தாரைத் தனது கூட்டத்துடன் சேர்த்துக்கொண்ட முகம்மது; பாரதத்துக்குள் தன்னுடன் சேர்ந்து தனது இளமைக்காலம் முதல் இருந்தோரால் பிறப்பிக்கப்பட்ட அனைவருடனும் கலக்கச்செய்து அவர்களின் உதவியுடன் பெருமளவிலான பாரதநாட்டைக் கைப்பற்றியதையே இங்கு காணவேண்டும்! முகம்மது மறைந்ததாக கூறப்படுவது கிபி 632இல்; இதிலும் 60 ஆண்டுகள் கணக்கிடப்படாமல் உள்ளதாகத்தெரிகிறது. சந்திரமான ஆண்டுகளைக் கொண்டு கணக்கிட்டதால் இந்த வேற்றுமை உருவாகிறது. அக்காலத்தில் பாரதநாட்டவரோ சூரிமானத்தை ஒரு ஆண்டாகக்கொள்வோர் ஆவர்! முகம்மதியரின் ஆதாரப்பூர்வமாக கருதப்படும் முதல் ஹதீஸ்கள் வாய்வழிச் செய்திகளாக சேர்க்கப்படுவது 220 ஆண்டுகள் கழித்துத் திரட்டப்பட்டன. கிபி 810இல்தான் புகாரியே பிறக்கிறார். ஏழாம் நூற்றாண்டு அரபியர்கள் ஒரு மாதிரியான கடவுள் தத்துவத்தைப் பின்பற்றி வந்துள்ளார்கள். அதப்போது அங்கிருந்த யூதமதம், கிறிஸ்துவம் ஆகியவற்றின் கலவையாக இருந்திருக்கிறது. இப் புதிய மதத்துக்கு ஆரம்பத்தில் பெயரிடப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு நிறுவனரும் இல்லையெனத்தெரிகிறது; புத்தகமும் இல்லை; கடுமையான விதிமுறைகளும் இல்லை. அரபிய ஆவணங்களிலும், பழம்பொருள் ஆய்வுகளிலும் எங்கும் குரான் பற்றிய குறிப்பே இல்லை. முதன் முதலில் 691இல்தான் குறிப்பு வருகிறது. அதாவது முகம்மது குரானை சொல்ல ஆரம்பித்ததாக கூறப்படுவதிலிருந்து 80 வருடங்களுக்கு பிறகு! அரபிய சமூகத்துக்கு மைய நூலாக ஆனதாக சொல்லப்படும் வருடத்திலிருந்து 60 வருடங்கள் கழித்துதான் குரானை பற்றிய குறிப்பே வருகிறது. பரசுராமர் என ஒருவர் இருந்தாரா? சேரலவரலாற்றில் பரசுராமர் இருந்ததாலேயே அதற்குப் பரசுராமக்ஷேத்ரம் என ஒரு பெயர் விளங்குகிறது! அவரால் குடியமர்த்தப்பட்டோரெல்லாம் தமிழரோ பாரதநாட்டவரோ அல்ல எனத்தெரிகிறது! பார்கவபிராமணர் எனத் தெரிகின்றனர். இதிகாசங்களிலும் இவர்கள் உள்ளனர்! யமதக்கினியின் மகன் எனக் காணப்படுவதால் அல்லஃசாந்தரின் மகனாகவும் தெரிகிறார். சிவனோடு அடையாளப்படுத்தக்கவராகவும் உள்ளார்! இவரைக்குறித்த தகவல்கள் இதிகாசங்களிலும் புராணங்களிலுமே உள்ளன! பலபெண்களைக் கொலைசெய்ததோடு 21 தலைமுறைகளில் ஒரு இனத்தை அழிப்பதாகச் சபதமுரைத்ததாகவும் தெரிகிறது. 21 தலைமுறை என்பது அவரவர் விருப்பம்போலக் கணக்கிடப்படுகிறது. கள / லப்பிரர் என ஒரு இனம் இருந்ததா? இருந்ததாகத்தெரியவில்லை! பரசுராமனால் குறிப்பிடப்படும் 21 தலைமுறைக்கால வரலாறாக நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபட்டோரால் கட்டமைக்கப்பட்டதே இந்த இருண்டகாலம்! இது ஒரு வரலாறற்ற காலமாகக்குறிப்பிடப்பட்டு வரலாற்றை மறைக்கவும் மாற்றவும் குறைக்கவும் கூட்டவும் சிதைக்கவும் பயண்படுத்தப்பட்ட காலம்! எல்லா உலகமதங்களும் சமயங்களும் இந்த இருண்டகாலத்தையே சிறப்புடன் பயண்படுத்தித் தங்களது மதங்களுக்கான வரலாற்றைக் கட்டமைக்கப் பயண்படுத்தப்பட்டது! அவற்றுக்கான சான்றுகள் இல்லையாயினும் தங்களது மத சமய தலைவர்- நிறுவனரை வரலாற்றிலிருந்து தேர்வுசெய்து ஒரு கூட்டுமுயற்சியாக வரலாற்றை மறைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது! புத்தன் என ஒருவர் இருந்தாரா? உலகவரலாற்றை வெளிப்படுத்தும் தகவல்களைக்கொண்ட நூல்களை எழுதிவந்த அமண / அமனர்களையும் அவர்களது நூல்களையும் முற்றிலுமாக் அழித்தொழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது! மேற்கண்ட உலகமதங்கள் நிறுவப்பட்டபின்னர் அமண / அமனரால் எழுதப்பட்ட நூல்களெல்லாம் கைப்பற்றப்பட்டு அலெக்சாந்திரியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இந்த அல்லெக்சாந்திரியா எது என எவருக்குமே தெரியாது! உலகில் அன்று இரண்டு அல்லெக்சாந்திரியாக்கல் இருந்தன; அவற்றுள் ஒன்றே இமையத்தில் மேற்றிசை அடிவாரத்தில் இருந்தது! சிங்களரால் கைப்பற்றிச்செல்லப்பட்ட நூல்களின் உதவியுடன் அமனத்தின் இறுதித்தீர்த்தங்கரனைப் புத்தன் என நிறுவிய சிங்களரால் கட்டமைக்கப்பட்டதே புத்தமதம். இந்தப் புத்தன் மகாவீர் அல்ல! இந்தியாவிலிருந்து புத்தன் என ஒருவர் இருந்ததாக புத்தமத நூல்களில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது! அமணகோதமர் என்றே அவரது பெயர் குறிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளது! பாரத் -- பாரதத்துக்குள் பிறந்த அவரது பிறப்பிடம் உறுதிப்படுத்தப்படவில்லை! வடமொழி அல்லது ஏதோ ஒரு மொழியில் "ஜா" என்ற ஒற்றைச்சொல்லில் உள்ள குறிப்பைக்கொண்டு அவதரித்தார் எனக்கொள்கின்றனர். அது தோன்றினார்- வந்தார் எனப் பொருள்கொள்ளத் தக்கது. அவரது பிறந்த, இறந்த ஆண்டுகள் ஏற்கத்தக்கனவல்ல! அவற்றிலும் 60 ஆண்டுகள் வேற்றுமை காணப்படுகிறது! மகாவீரர் என ஒருவர் இருந்தாரா? அமண நூல்களில் மட்டுமே காணப்படுகிறார்! இவருக்குமுன்னர் ஒரு பெண்ணே தீர்த்தங்கரியாக இருந்துள்ளார். அவரை வன்முறையால் நீக்கியதாகவும் உள்ளது! அதனாலேயே மகாவீரர் எனப்பட்டார்; தன்னை இறுதித் தீர்த்தங்கரர் எனவும் அறிவித்துக்கொண்டார்! அப்பெண்ணைப் புணர்ந்து கருவுறச்செய்து திருமணம்செய்துகொள்ள மறுத்தவரே மகாவீரர் எனக்காணப்படுகிறது! இவருக்குப் பின்னரும் சமகாலத்திலும் வாழ்ந்த புத்தரும் மற்கலியும் கூடத் தீர்த்தங்கரர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளனர்! ஏசு என ஒருவர் இருந்தாரா? 1. மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது. எனவே தான் யூதர்களின் இலக்கிய மொழியாகிய எபிரேய மொழியில் எழுதப்பட்டது. 2. மாற்கு : ரோமர்களுக்காக ஏழுதப்பட்டது. 3. லூக்கா : கிரேக்க மக்களுக்காக அதாவது எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களுக்காக எழுதப்பட்டது. 4. யோவான் : விசுவாசிகளுக்காவும், மற்றும் சாதாரண மக்களுக்காகவும் எழுதப்பட்டது. அல்லா தான் ஜிப்ரேலை கன்னி மரியம்மின் பெண்ணுறுப்பில் ஊதிட மரியம் கர்ப்பம் ஆனார். 66:12 & 21:9 ஏசு என ஒருவர் இருந்தாரென உறுதிப்படுத்தப்படவில்லை! விவிலியத்திலோ புதிய ஏற்பாட்டிலோ அவரது பிறந்த ஆண்டு அல்லது பிறந்த நாள் என எதுவும் இல்லை! இளமைப்பருவம் குறித்த வரலாறு இல்லை! வரலாற்றுச்சான்றுகளும் இல்லை! ஆனால் விவிலியத்தி எஸ்தரின் ஆகமத்தில் இந்தியாதேசம் முதல் எத்தியோப்பியாதேசம்வரையுள்ள 127 நாடுகளில் உலகவரலாறு ஒரே காலத்தில் மாற்றப்பட்டிருக்கலாம் என்கிற உண்மை உணர்த்தப்படுகிறது. அகத்தியர் என எவரும் இருந்தாரா? அகத்தியர்கள் 49பேர் இருந்ததாக இதிகாச புராணங்களில் காணப்படுவதோடு தொல்தமிழ்ப்பாடைகளிலும் காப்பியங்களிலும் உறுதிப்படுத்தப்படுகிறது! அவர் வேளிர் இனத்தவராக அறிமுகமாகிறார். 49 வழிமுறைகளில் தொடர்ந்து அகத்தியர்கள் இருந்துள்ளனர் எனத்தெரிகிறது! ஒரு வழிமுறை என்பது எத்தனை ஆண்டுகளைக்கொண்டதென எவரும் இன்றுவரை தெளிவுபடுத்தவில்லை! உலக மதங்களும் சமயங்களும் புராணங்களும் தத்தமது வரலாற்றையே தொன்மையானவையெனக் குறிப்பிட்டுக்கொள்கின்றன! ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களே பல்வேறு காலங்களில் வாழ்ந்ததாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதே வரலாறு!

1 comment:

  1. தாங்கள் சுமேரியரின் க்யூனிபார்மும் எகிப்தியர்களின் புக் ஆப் த டெட் டெட் ஸீ ஸ்க்ரால்ஸ் ஹிட்டைட்/மிட்டானி க்யூனிபார்ம் மற்றும் செல்ட்/ட்ரூயிட் புராணங்களையும் சேர்த்து வரும் கட்டுரைகளுக்காக ஆவலோடுஇருக்கிறேன்

    ReplyDelete